டெல்லியில் வன்முறைகள் தூண்டப்படுகிறதா? தன்னிச்சையானதா? ப.சிதம்பரம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிழக்கு டெல்லியில் வன்முறைகள் தூண்டப்படுகின்றனவா? அல்லது தன்னிச்சையாக நடைபெறுகின்றனவா? என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் கோர வன்முறை சம்பவங்களில் 18 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

Violence in East Delhi instigated or spontaneous? Chidambaram

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில், டெல்லியில் நடைபெறும் வன்முறைகள் தூண்டிவிடப்பட்டனவா? தன்னிச்சையாக நடைபெறுகின்றனவா? இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது மத்திய அரசின் கடமை.

இன்று வரை இந்த வன்முறைகள் நீடித்து கொண்டிருக்கின்றன. இது டெல்லி போலீசாரின் தோல்வியையே காட்டுகிறது. டெல்லி உயர்நீதிமன்றம் நள்ளிரவில் விசாரணை நடத்தி அவசர சிகிச்சைகள் வழங்க உத்தரவிடுகிறது எனில் டெல்லி போலீசாரின் செயல்பாடுகள் பற்றி என்ன சொல்வது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+