மோடியை உளவியல் ரீதியாக உடைத்துவிட்டோம்.. சொல்லிவிட்டு.. செய்து காட்டிய ராகுல் காந்தி.. ட்விஸ்ட்
டெல்லி: மோடியை உளவியல் ரீதியாக உடைத்துவிட்டோம்.. அவர் முன்பு போல இல்லை.. இந்த தேர்தலில் அது மேலும் உடையும் என்று சொல்லிவிட்டு.. அதை செய்தும் காட்டி இருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பாஜக சந்தித்துள்ள மிகப்பெரிய பின்னடைவு அந்த கட்சிக்கு பெரிய சிக்கலாக மாறி உள்ளது. ஹரியானாவில் பாஜக 46 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில்.. காங்கிரஸ் 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஹரியானாவில் முன்னிலை வகித்தாலும்.. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களிலும் , பாஜக 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் பாஜக தரப்பில் இப்போதே பிரஷர் எகிறி உள்ளது.

இந்த தேர்தல் சரிவு காரணமாக.. பாஜகவிற்கு தேசிய அளவில் மிகப்பெரிய சவால் ஒன்று உருவாகி உள்ளது. கிட்டத்தட்ட கேம் ஓவர் அல்லது கேம் சேஞ்சர் என்று சொல்லும் அளவிற்கு முக்கியமான சவால் ஒன்று மோடிக்கு வந்துள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டி பெற முடியாமல் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது மாநில தேர்தல்களிலும் பாஜக பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பிரச்சாரம்: மோடியை உளவியல் ரீதியாக உடைத்துவிட்டோம்.. அவர் முன்பு போல இல்லை.. இந்த தேர்தலில் அது மேலும் உடையும் என்று சொல்லிவிட்டு.. அதை செய்தும் காட்டி இருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தி ஹரியானா, ஜம்மு காஷ்மீர் பிரச்சாரங்களில் அதிகம் பயன்படுத்திய வார்த்தைகள் இதுதான்.
"நாங்கள் மோடியை உளவியல் ரீதியாக உடைத்துவிட்டோம். முக்கியமாக லோக்சபா தேர்தலிலேயே மோடியை உளவியல் ரீதியாக முடித்துவிட்டோம். பார்லிமென்டில் அவர் முன் அமர்ந்து, அவரை பார்த்தாலே தெரிகிறது. எப்போதும் நம்பிக்கையாக இருக்கும் அவர் இப்பொது அப்படி இல்லை. அவரது நம்பிக்கை போய்விட்டது எனக்குத் தெரியும்... இன்னும் சிறிது நேரம் உள்ளது, மோடியையும் பாஜகவையும் ஆட்சியில் இருந்து அகற்றுவோம்.
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அவரின் உளவியலை மேலும் உடைப்போம். அவர் ஆட்சியை இழக்கும் காலம் வரும். அவருக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. அதனால்தான் அவர் பிரச்சாரமும் செய்யவில்லை, பெரிதாக ஹரியாணாவிற்கு பிரச்சாரம் செய்யவில்லை, என்று காங்கிரஸ் ராகுல் காந்தி தெரிவித்தார். இந்திய கூட்டணியின் கீழ் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை காரணமாக மோடியின் நம்பிக்கை குறைந்துள்ளது., என்று காங்கிரஸ் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அவரின் உளவியலை மேலும் உடைப்போம். அவர் ஆட்சியை இழக்கும் காலம் வரும். அவருக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. அதனால்தான் அவர் பிரச்சாரமும் செய்யவில்லை, பெரிதாக ஹரியானாவிற்கு பிரச்சாரம் செய்யவில்லை, என்று காங்கிரஸ் ராகுல் காந்தி தெரிவித்தார். இந்திய கூட்டணியின் கீழ் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை காரணமாக மோடியின் நம்பிக்கை குறைந்துள்ளது., என்று காங்கிரஸ் ராகுல் காந்தி தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டி பெற முடியாமல் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது மாநில தேர்தல்களிலும் பாஜக பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications