புது வார்னிங்.. 3வது அலை எப்படி இருக்கும்? எப்போது வரும்?.. எய்ம்ஸ் இயக்குநர் வெளியிட்ட தகவல்
3வது அலை பரவல் தாக்கம் எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது
டெல்லி: இந்தியாவில் 3வது அலை பரவல் எப்படி இருக்கும், அதன் தாக்கம் எத்தகையது என்று புது தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 2வது அலை படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது.. நேற்று புதிதாக 33,212 கொரோனா கேஸ் உறுதியாகி உள்ளது.. 35,497 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்... 421 பேர் உயிரிழந்துள்ளனர்..
இப்படிப்பட்ட சூழலில் 3வது அலை வரும் என்ற எச்சரிக்கைகள் கிடைத்து வருகின்றன. இதுதொடர்பாக எய்ம்ஸ் டைரக்டர் ரந்தீப் குலேரியா 3வது அலை பரவல் குறித்து அவ்வப்போது அலர்ட் செய்தும் வருகிறார்.

இந்தியா
"நாம் ஏற்கனவே கடந்த காலத்தில் ஏற்பட்ட தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை.. அதனால் வரப்போகும் மூன்றாம் அலையை ஒரேயடியாக தவிர்க்க முடியாது.. அது 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவை தாக்கும் என்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குநர் ரந்தீப் குலேரியா கடந்த மாதமே தெரிவித்திருந்தார்.

தடுப்பூசி
அந்தவகையில் இப்போது ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், அவர் சொல்லும்போது, "இந்தியாவில் 3வது அலை ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது... இருந்தாலும், தொற்று கட்டுப்பாடுகளை எந்தளவிற்கு பின்பற்றுகிறோம் என்பதை பொறுத்துதான் அதன் தாக்கம் அமையும்... ஆனால், 2வது அலையை போல் அந்த அளவுக்கு வீர்யம் இருக்காது என்றே நினைக்கிறேன்.. ஆனால், தடுப்பூசி போடாத காரணத்தால் குழந்தைகள் அதிக அளவில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாக வாய்ப்புள்ளது.

கவலை
நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. இந்த ஆகஸ்ட் மாதத்தில் முதல் 10 நாட்களில் பெங்களூருவில் மட்டும் 543 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அதில் 0-9 வயதுக்கு உட்பட்டவர்கள் 88 பேர், 10-19 வயதுக்கு உட்பட்டவர்கள் 305 பேர் என்று தெரிய வந்துள்ளது... அதிலும் கடைசி 5 நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது... இதுதான் மிகுந்த கவலையையும் பெங்களூருவில் ஏற்படுத்தி உள்ளது.

பாதிப்பு
எப்படியும், அடுத்த ஓரிரு மாசத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் கிடைத்துவிடும்.. அதுக்குப்பிறகு, தடுப்பூசி போட்டுக் கொள்ள நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.. எல்லா வயதினரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்... இதனால் மோசமான பாதிப்புகள் எதுவும் வராது.. ஒருவேளை 3வது அலை வந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது" என்றார்.
-
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications