இப்போதுதான் மோடி அலை அதிகம் வீசுகிறது.. எங்களுக்கே வெற்றி.. மோடியுடன் சேர்ந்து அமித் ஷா பேட்டி!
கடந்த லோக்சபா தேர்தலை விட இந்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை பெறுவோம் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லி: கடந்த லோக்சபா தேர்தலை விட இந்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை பெறுவோம் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். இன்று முதல்முறையாக பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். கடைசி கட்ட தேர்தல் வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க உள்ளது. இதனால் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு முடிகிறது. இதையடுத்து, தற்போது ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் செய்தியாளர்களை சந்திக்கும் போதே பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் அமித் ஷா செய்தியாளர்களிடம் பேசினார்.

அமித் ஷா பேட்டி
அமித் ஷா தனது பேட்டியில், மக்களவை தேர்தலுக்காக வரலாற்றில் இல்லாத அளவுக்கு பாஜக பிரச்சாரம் செய்தது.133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. விவசாயிகள், ஏழைகள், பெண்களுக்கு மோடி அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. சுதந்திரத்திற்கு பிந்தைய தேர்தலில் பாஜகவிற்கு இதுதான் முக்கியமானது.

என்ன சொன்னார்
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று நம்புகிறோம். இந்த முறை முன்பைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அரசை சுமூகமாக நடத்துவதில்தான் நாங்கள் அதிக கவனம் செலுத்தினோம் .மோடி தலைமையிலான ஆட்சியில் மக்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள்

எங்கு வெற்றி
கடந்த தேர்தலில் வெற்றிபெறாத இடங்களை குறி வைத்துதான் தேர்தலை சந்தித்தோம். அரசின் திட்டங்கள் மூலம் 50 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர். கூடுதல் பலத்துடன் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிப்போம். இந்த தேர்தலில் எங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது.

வீட்டு வசதி எப்படி
வீட்டு வசதி, மின்சாரம், உணவு, எரிபொருள் அனைத்து மக்களுக்கு எளிதாக கிடைக்கிறது.நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற அலை நாடு முழுவதும் வீசுகிறது. கடந்த தேர்தலில் வெற்றிபெறாத இடங்களை குறி வைத்துதான் இந்த தேர்தலை சந்தித்தோம், என்று அமித் ஷா குறிப்பிட்டார்.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications