அபிநந்தனுக்கு அமோக வரவேற்பு.. நரேந்திர மோடி, ராகுல் காந்தி ட்வீட்டரில் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விங் கமாண்டர் அபிநந்தன் தாயகம் திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Welcome Home Wing Commander Abhinandan: Narendra Modi, Rahul Gandhi

இன்று இரவு 9 மணி 20 நிமிடத்திற்கு, வாகா எல்லையை கடந்து அபிநந்தன் இந்திய எல்லைக்குள் அழைத்துவரப்பட்டார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில், "விங் கமாண்டர் அபிநந்தனை, வரவேற்கிறேன். உங்களது சிறப்பான வீரத்தால் இந்த நாடு பெருமை கொள்கிறது. 130 கோடி இந்திய மக்களுக்கும் நமது பாதுகாப்பு படை உத்வேகத்தை அளிக்கிறது. வந்தேமாதரம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வெளியிட்ட ட்வீட்டில், விங் கமாண்டர் அபிநந்தன் காண்பித்த வீரம், மாண்பு ஆகியவை நம்மை பெருமைப்பட செய்துள்ளது. கூடுதல் அன்போடு உங்களை மீண்டும் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ட்வீட்டில், ஜெய் ஹிந்த் என கூறியுள்ளார்.

நாடு திரும்பிய அபிநந்தனை நாட்டு மக்களுடன் இணைந்து நானும் வரவேற்பதில் மகிழ்ச்சி, என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+