மோடி அப்படி சொன்னாரா?.. வெள்ளை மாளிகைக்கு கோபமாக கடிதம் அனுப்பிய மத்திய அரசு.. நீடிக்கும் பதற்றம்!
மத்திய அரசு தற்போது வெள்ளை மாளிகைக்கு வெளியுறவுத்துறை மூலம் கடிதம் அனுப்பி உள்ளது.
டெல்லி: மத்திய அரசு தற்போது வெள்ளை மாளிகைக்கு வெளியுறவுத்துறை மூலம் கடிதம் அனுப்பி உள்ளது. பிரதமர் மோடி குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கு விளக்கம் கேட்டு உள்ளது.
நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நடந்த சந்திப்பு பெரிய பிரச்சனையாகி உள்ளது. காஷ்மீர் பிரச்சனை குறித்து இரண்டு நாட்டு அதிபர்களும் பேசிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் வெளியுறவு கொள்கை இதனால் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கூறினார்
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவும்படி தன்னிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்ரான் கானிடம் பேசிய டிரம்ப், பிரதமர் மோடி காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க தயாராக இருக்கிறார். காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவ வேண்டும் என்று அவர் என்னிடம் கோரிக்கை வைத்தார், என்று டிரம்ப் கூறினார்.

என்ன வழக்கம்
பொதுவாக இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை இரண்டு நாடுகள் மட்டுமே பேசி தீர்ப்பதாக இருந்தது. இதில் மூன்றாவதாக ஒரு நபர் எப்போதும் உள்ளே நுழைந்தது கிடையாது. ஆனால் தற்போது மோடியே டிரம்ப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்திய தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

என்ன மறுப்பு
இதற்கு இந்திய தரப்பில் ஏற்கனவே மறுப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக வெள்ளை மாளிகைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. மோடி குறித்து டிரம்ப் ஏன் அப்படி கூறினார், மோடி காஷ்மீர் பிரச்சனை குறித்து எப்போது பேசினார், என்பது தொடர்பாக விளக்கம் கேட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.

தொடரும் பதற்றம்
டிரம்ப்பின் கருத்து காரணமாக இந்தியா அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. இதற்கு அமெரிக்க தரப்பு என்ன பதில் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications