நித்தியானந்தா சாமியாரின் உடல்நிலை பற்றிய வதந்தி! உறவினர் மறுப்பு
டெல்லி: கைலாசாவில் இருப்பதாக சொல்லப்படும் நித்தியானந்தா சாமியாரின் உடல்நிலை குறித்து உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவிய நிலையில் அவை வதந்தி என அவருடைய உறவினர் மறுத்துள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா, கர்நாடக மாநிலம் பிடதிக்குச் சென்று ஆசிரமம் அமைத்தார். பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவிய அவர், ஒரு நடிகையுடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கினார். பின்னர், பெண் சீடர்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பெங்களூரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார்.

கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்த நித்தியானந்தா, அங்கு இந்துக்களுக்கான நாடு என்றும், தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். தொழில் தொடங்க வருமாறு தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக சத்சங்க வீடியோக்களைக் குறைத்த நித்தியானந்தா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட அவர் ஜீவசமாதி அடைந்துவிட்டதாக வதந்திகள் பரவின. ஆனால், அவர் மீண்டும் வீடியோ வெளியிட்டார்.
சிவராத்திரி விழாவில் அவர் பேசிய வீடியோ வைரலானது. எனினும், அது பழைய வீடியோ என பலர் கருத்து தெரிவித்ததால், அந்தப் பிரசங்கம் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து இன்று காலை முதலே உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் பரவின. இந்த நிலையில் அவை வதந்தி என நித்தியானந்தாவின் உறவினர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications