கோவிட் 19 சுய உறுதி படிவம் என்றால் என்ன?.. நீட் மாணவர்களுக்கு கட்டாயம்!
டெல்லி: நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு எழுத வரும் ஒவ்வொரு மாணவரும் கோவிட் 19 க்கான சுய உறுதி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். கைகளில் கிளவுஸ் அணிந்திருக்க வேண்டும். சானிடைசர் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவர்கள் கட்டாயம் கோவிட் 19 சுய உறுதி படிவத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது ஒரு படிவத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டு தங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அந்த வைரஸ் உறுதியாகவில்லை.
அது போல் அண்மைகாலமாக காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இல்லை என்றும் சுயமாக உறுதி அளித்த அந்த விண்ணப்பத்தை தேர்வு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தில் தேர்வு கூட கண்காணிப்பாளர் கையெழுத்திடுவார்.
அனுமதி சீட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை கவனத்துடன் படிக்க வேண்டும். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மாணவரும் அனுமதி சீட்டு இல்லாமலோ, உரிய அடையாள அட்டை இல்லாமலோ அனுமதிக்கப்படாது.












Click it and Unblock the Notifications