"எதிரிகள் கண்களில் மண்ணை தூவும்.." சாதித்த இந்தியா! பிரதமர் சொன்ன MIRV ஏவுகணை! இதுல இவ்வளவு இருக்கா
டெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட MIRVed தொழில்நுட்பம் மூலம் இயங்கும் அக்னி ஐந்து ரக ஏவுகணையான திவ் அஸ்திரா சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த MIRVed என்றால் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாகத் தகவல் வெளியானது. மாலை 5.30 மணியளவில் அவர் உரையாற்றுவார் என கூறப்பட்டது. இருப்பினும், அவர் உரையாற்றவில்லை..

பிரதமர் மோடி: மாறாக அவர், ட்வீட் மட்டும் பதிவிட்டுள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி ஐந்து ரக ஏவுகணை திவ்யாஸ்திரா சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். இது பாதுகாப்புத் துறையில் மிக முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இப்போது சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை MIRVed தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அதென்ன MIRVed. இதில் உள்ள சிறப்புகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
என்ன தொழில்நுட்பம்: இந்த Multiple Independently-targetable Reentry Vehicles என்பது முதலில் 1960களில் டெவலப் செய்யப்பட்ட ஒரு ராணுவ தொழில்நுட்பமாகும். ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை நோக்கி அணு ஆயுதங்களை ஏவ அனுமதிப்பதே இதன் திட்டமாகும். பொதுவாக வழக்கமான ஏவுகணையில் ஒரே ஒரு குண்டு மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணையில் பல்வேறு குண்டுகளை எடுத்துச் செல்ல முடியும்.
உதாரணமாக, ரஷ்ய உருவாக்கி வரும் MIRV ஏவுகணையில் ஒரே நேரத்தில் 16 குண்டுகளை எடுத்துச் செல்ல முடியும், அதில் ஒவ்வொரு குண்டையும் எந்த டார்கெட்டை நோக்கியும் அனுப்பலாம். எந்த வேகத்தில் வேண்டுமானாலும் எந்த திசையை நோக்கியும் இந்த MIRVedஇல் இருந்து அனுப்பலாம். சில வரை MIRVed ஏவுகணைகள் 1,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட தாக்கும்.
ஏன் முக்கியம்: இது வழக்கமான ஏவுகணைகளைக் காட்டிலும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் வழக்கமான ஏவுகணைகளால் ஒரே திசையை நோக்கித் தான் தாக்க முடியும். அதுவும் அதில் இருக்கும் அத்தனை குண்டுகளும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும்.
ஆனால், இந்த MIRVed ஏவுகணையில் ஒரே டார்கெட்டை நோக்கிக் கூட பல திசைகளில் இருந்தும் தாக்க முடியும். இது எதிராளிகளுக்கு கடும் சவாலாக இருக்கும் MIRVகள் ஆரம்பத்தில் பாலிஸ்டிக் ஏவுகணையைத் தோற்கடிக்க வடிவமைக்கப்படவில்லை என்றாலும், வழக்கமான ஏவுகணைகளை விட அவற்றை சமாளிப்பது ரொம்பவே கடினம்.
எந்தெந்த நாடுகள்: அமெரிக்கா தான் இந்த தொழில்நுட்பத்தை முதலில் உருவாக்கியது. கடந்த 1970ஆம் ஆண்டு அமெரிக்கா முதலில் இந்த MIRV ஏவுகணைகளை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் இதை உருவாக்கியது. இப்போது இந்த இரு நாடுகளைத் தவிர்த்து பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த தொழில்நுட்பம் இருக்கிறது. இப்போது இந்த லிஸ்டில் இந்தியாவும் இணைகிறது.
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications