Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை எய்ம்ஸ் பணி எப்போது தொடங்கும்? விருதுநகர் எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் தந்த பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி எப்போது தொடங்கும்? எப்போது பணிகள் முழுமையாக முடிக்கப்படும்? என்பது பற்றி விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 2015ம் ஆண்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்தது. இதையடுத்து 2019ம் ஆண்டில் மதுரை தோப்பூரில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

What is stage of Madurai AIIMS? Union Minster of State for Health Bharati Pravin pawar explains

இதையடுத்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. சுமார் 224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது வரை பணிகள் நடைபெறவில்லை. ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கிடைப்பதில் தாமதம், தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியதால் தாமதம் உள்ளிட்டவை தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தாமதம் என மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் மத்திய அரசு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் அலட்சியம் காட்டுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் பாஜக சார்பில் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே மதுரை எய்ம்ஸ் பணிக்கான மதிப்பீடு என்பது ரூ.1977.80 கோடியாக உயர்த்தப்பட்டது. அதோடு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ந்நிலையில் தான் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக அவர், ‛‛எனது தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டாலும் கூட இப்போது வரை பணிகள் தொடங்கவில்லை. இதனால் அமைச்சரிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். எப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கும்? எப்போது அந்த பணிகள் முழுவதுமாக முடிக்கப்படும்? என்பதை விளக்க வேண்டும். ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக காத்து நிற்கிறது'' என்றார்.

இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் திட்டத்துக்கான நிதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வரும்'' என்றார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தமட்டில் 750 படுக்கைகள் தான் இருக்கும். ஆனால் தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது. கூடுதலாக 150 படுக்கைகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மதுரை மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+