ராகுல் மீண்டும் எம்பியா வேண்டுமா? ‛கை’க்கு மாஜி அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஐடியா!என்ன தெரியுமா?
டெல்லி: ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்னும் மேல்முறையீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2014 முதல் 2017 வரை இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றிய முகுல் ரோஹத்கி காங்கிரஸ் கட்சிக்கு ஐடியா கொடுத்துள்ளார். இவர் சமீபத்தில் மத்திய அரசு வழங்கிய அட்டர்னி ஜெனரல் பொறுப்பை தட்டிக்கழித்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அட்வைஸ் வழங்கி உள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். அப்போது கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில் மோடி பெயர் குறித்து பேசி ராகுல் காந்தி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி நேற்று நேரில் ஆஜரானார். தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

தகுதி நீக்கம்
மேலும் அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாள் ஜாமீன் வழங்கி தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்தியாவில் குற்றம் மற்றும் கிரிமினல் அவதூறு வழக்குகளில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேலாக சிறை தண்டனை விதிக்கப்படும் நபர்களை எம்பி, எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம். இதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் இடம்வழங்குகிறது. அதனடிப்படையில் தான் நேற்று ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் எம்பி பதவியை இழந்துள்ளார்.

முகுல் ரோஹத்கி விளக்கம்
இந்நிலையில் தான் ராகுல் காந்தி சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் தகுதி நீக்க நடவடிக்கை பற்றியும், அவரால் மீண்டும் எம்பியாக வர முடியுமா? இல்லையா? என்பது பற்றியும் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான முகுல் ரோஹத்கி முக்கிய பாயிண்டுகளை தெரிவித்துள்ளார். இதுபற்றி முகுல் ரோஹத்கி கூறுகையில், ‛‛சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கி உள்ளது. இதனை எதிர்த்து உடனடியாக காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் காலதாமதம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் உள்ளனர்.

மேல்முறையீடு செய்வது தான்
கிரிமினல் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட போதே அவரது தகுதி நீக்கம் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றானது. அந்த வகையில் தான் நேற்று அவர் தகுதி நீக்கம் செய்துள்ளது. மேலும் வழக்கில் மேல்முறையீடு செய்வதில் தாமதம் காட்டி வரும் காங்கிரஸ் கட்சி இறுதியில் தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் செய்ய வேண்டியது என்பது மேல்முறையீடு செய்து திறம்பட வாதாடி வெல்வது தான்'' என்றார்.

யார் இந்த முகுல் ரோஹத்கி?
முகுல் ரோஹத்கி கடந்த 2014 ஜூன் மாதம் முதல் 2017 ஜூன் வரை இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார். கேகே வேணுகோபால் புதிய அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அட்டர்ஜி ஜெனரல் பதவி என்பது 3 ஆண்டு காலம் தான். ஆனால் பணி நீட்டிப்பு என்ற அடிப்படையில் கேகே வேணுகோபால் 2017 முதல் 2022 வரை பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் முகுல் ரோஹத்கியை மீண்டும் அட்டர்னி ஜெனரலாக மத்திய அரசு தேர்வு செய்தது. ஆனால் அவர் அந்த பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications