Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முன்பதிவு செய்தும் ரயலில் சீட் கிடைக்கலையா.. இதை செய்யுங்க போதும்! 5 நிமிடத்தில் பிரச்சனை சரியாகும்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற சூழல்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

இந்தியாவில் அனைவரும் விரும்பி பயணிக்கும் பொது போக்குவரத்து முறையாக ரயில்கள் இருக்கிறது. செலவு குறைவு, கழிப்பறை வசதி இருக்கிறது போன்ற காரணங்களால் பலரும் ரயில்களில் பயணிக்கவே விரும்புகிறார்கள்.

Vande Bharat train india indian railways

உரிய டிக்கெட் இல்லாத பயணிகள்: அதேநேரம் சமீப காலங்களாக முன்பதிவு செய்யாத பயணிகள் இதுபோல முன்பதிவு பெட்டிகளில் ஏறிக்கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. முன்பு கூட ஸ்லீப்பர் பெட்டிகளில் மட்டுமே இதுபோல நடக்கும். ஆனால், இப்போது முதல் ஏசி வகுப்பு வரை இதுபோன்ற சம்பவங்கள் பரவலாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் உபி மாநிலத்தில் வந்தே பாரத் ரயில்களிலும் கூட இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.. உங்களுக்கும் இதுபோன்ற சம்பவம் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

உங்களது முன்பதிவு சீட்டில் வேறு யாராவது அமர்ந்து கொண்டு இருந்தால்.. முதலில் அவர்களிடமே கேட்கலாம். பெரும்பாலான நேரங்களில் தமிழகத்தில் இப்படிச் சொன்னாலே போதும் அவர்களாகவே வேறு சீட்டிற்கு போய்விடுவார்கள். சொல்லியும் நகரவில்லை என்றால் டிடிஇ அதாவது டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளிக்கலாம். அவர் அந்த பயணியை முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏறச் சொல்வார்.

என்ன செய்யலாம்: இதுவரை எல்லாமே ஓகே தான். ஆனால், டிடிஇ அலுவலரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும். இதுவே பலருக்கும் இருக்கும் சந்தேகம். இதுபோன்ற நேரங்களில் பெரும்பாலானோர் எக்ஸ் பக்கத்தில் அதை பகிர்ந்து இந்தியன் ரயில்வேவை டேக் செய்து புகார் அளிப்பார்கள். அப்படிச் செய்யும் போது எல்லா நேரமும் தீர்வு கிடைக்கும் எனச் சொல்ல முடியாது.

ஆன்லைனில் புகார்: இதுபோன்ற நேரங்களில் நீங்கள் இரண்டு விஷயங்களை மேற்கொள்ளலாம். முதலில் Railway Madad என்ற சைட்டில் சென்று புகார் அளிக்கலாம். முன்பதிவு செய்த பெட்டிகளில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் குறித்து இதில் புகார் அளித்தால் போதும்.. உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

இதற்காக நீங்கள் Railway Madadஇன் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும்.. அங்கு நீங்கள் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவிட வேண்டும். பிறகு Send OTPஐ கிளிக் செய்தால் ஒடிபி உங்களுக்கு மொபைலுக்கு அனுப்பப்படும். அதை அந்த சைட்டில் பதிவிட வேண்டும். பிறகு உங்கள் டிக்கெட் PNR நம்பரை பதிவிடவும்.. அதன் பிறகு புகாரின் டைப் மற்றும் சப் டைப்களை தேர்வு செய்யவும்.

எப்போது இந்த சிக்கலோ அந்த தேதியைப் பதிவு செய்யுங்கள். மேலும், போட்டோ எதாவது இருந்தால் அதையும் இணைக்கலாம். உங்கள் புகார் குறித்து விரிவாக எழுதிப் பதிவிட வேண்டும். பிறகு சம்மிட் என்பதை கிளிக் செய்து புகார் அளிக்கவும்.

ஹெல்ப் லைன்: அப்படி இல்லை என்றால் ரயில்வே ஹெல்ப்லைன் எண் 139ல் புகார் தெரிவிக்கலாம். உடனடியாக புகார் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இல்லையென்றால் ரயிலில் உள்ள ரயில்வே போலீஸ் படையின் உதவியையும் நாம் கோரலாம். இந்த ஆப்ஷன்களில் எதாவது ஒன்றை நாம் செய்தால் உரிய நடவடிக்கை விரைந்து எடுப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+