சந்திரயான் 2ல் சறுக்கல் ஏற்பட்டது எப்படி? தொடர்ந்து அமைதி காக்கும் இஸ்ரோ.. நீடிக்கும் மர்மங்கள்!
சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரில் எப்படி பிரச்சனை ஏற்பட்டது என்று இன்னும் இஸ்ரோ விளக்காமல் இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
டெல்லி: சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரில் எப்படி பிரச்சனை ஏற்பட்டது, எதனால் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று இன்னும் இஸ்ரோ விளக்காமல் இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை சந்திராயன் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. அதிகாலை 1.48 மணிக்கு சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது.
விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு இழந்த பின் நேற்று முதல்நாள் விக்ரம் லேண்டர், ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதனுடன் இன்னும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.

நிறைய கேள்வி
இந்த நிலையில் விக்ரம் லேண்டர் குறித்து நிறைய கேள்விகள் எழுந்துள்ளது. விக்ரம் லேண்டர் குறித்து இஸ்ரோ சில விஷயங்களை மட்டுமே வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறது. முக்கியமான விஷயங்களை இன்னும் இஸ்ரோ வெளியிடவில்லை.

என்ன தகவல்கள்
இதுவரை இஸ்ரோ வெளியிட்டு இருக்கும் தகவல்கள் என்று பார்த்தால், விக்ரம் லேண்டர் 2.1 கிமீ தூரத்தில் இருக்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின் விக்ரம் லேண்டர் ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் இன்னும் தொடர்பு ஏற்படவில்லை. விக்ரம் லேண்டர் வேகமாக தரையிறங்கி இருக்கலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

இதுவரை இதுதான்
இதுதான் நமக்கு இதுவரை கிடைத்திருக்கும் தகவல். ஆனால் விக்ரம் லேண்டர் ஏன் சரியாக லேண்ட் ஆகவில்லை. அதில் ஏற்பட்ட கோளாறு என்ன? எதனால் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று இன்னும் இஸ்ரோ வாய் திறக்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் எதுவும் அளிக்காமல் இஸ்ரோ அமைதி காத்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

என்ன குழப்பம்
விக்ரம் ஏன் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது இஸ்ரோவுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். எதனால் சிக்கல் ஏற்பட்டு இருக்கும் என்று இஸ்ரோ நினைத்தால் கண்டிப்பாக கூற முடியும். அவர்களிடம் இருக்கும் டேட்டா அதற்கான பதிலை கொடுக்கும். ஆனால் இஸ்ரோ எந்த விளக்கமும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறது .

என்ன காரணம்
2006ல் GSLV-F02 ராக்கெட் வெடித்து சிதறியது, அதேபோல் கிரேயோஜெனிக் என்ஜின் சோதனை முதல்முறை தோல்வியில் முடிந்தது. இந்த சமயங்களில் எல்லாம் இஸ்ரோ மிகவும் வெளிப்படையாக துரிதமாக அதற்கான காரணத்தை சொன்னது . இதை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் என்ன
ஆனால் விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்து 4 நாட்கள் ஆகிறது. இன்னும் அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை, அல்லது காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அதை வெளியிடப்படவில்லை. ஏன் இஸ்ரோ இப்படி தொடர்ந்து அமைதி காத்து வருகிறது என்று மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications