டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் பெரும் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு.. 'லோன் உல்ப்' பாணி.. 3 பேர் கைது

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பெரும் தீவிரவாத தாக்குதல், காவல்துறையால் முறியடிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் 3 பேர் அசாமில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த தகவலை டெல்லி துணை போலீஸ் கமிஷனர் பிரமோத் குஷ்வாஹா உறுதி செய்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பைப் வெடிகுண்டுகள், நவீன குண்டுகள் (ஐ.இ.டி), போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்ட விசாரணையில் ஐஎஸ்ஐஎஸ் மாதிரியிலான தாக்குதல் திட்டத்தோடு இவர்கள் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

Whether it’s CM Fadnavis or CM Thackeray, the only winner in Maharashtra is Rahul Gandhi

வட இந்தியாவில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் இவர்கள் இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் நடைபெற்றது போன்ற 'லோன் வுல்ப்' வகை தாக்குதல்களை இவர்கள் நடத்த திட்டமிட்டு இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது மூன்று பேருமே தனித்தனியாக பிரிந்து சென்று பெரும் கூட்டம் இருக்கக்கூடிய பகுதிகளில், அதிக உயிர்ச் சேதத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. முன்னதாக அசாமில், தூத்னோய் ராசலீலா நிகழ்ச்சியில், இவர்கள் குண்டுவைக்க திட்டமிட்டிருந்ததாகவும், கடைசி நேரத்தில் இது முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தெரிவிக்கிறது.

அவை காவலர்கள் அத்துமீறல்.. காங் எம்பி ஜோதிமணி உள்பட 2 பெண் எம்பிக்கள் சபாநாயகரிடம் புகார்அவை காவலர்கள் அத்துமீறல்.. காங் எம்பி ஜோதிமணி உள்பட 2 பெண் எம்பிக்கள் சபாநாயகரிடம் புகார்

இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இவர்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள், டெல்லியில் இவர்களுக்கு யாரேனும் உதவி செய்தனரா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி தவிர போபால் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்துவது இவர்கள் திட்டம் என கூறப்படுகிறது. பெரு நகரங்களில் காவல்துறை மிகுந்த உஷாராக இருப்பதாலும், நவீன பயிற்சிகள் அவர்களுக்கு இருப்பதாலும், சிறு நகரங்களை நோக்கி, தீவிரவாதிகளின் பார்வை திரும்பியுள்ளது, இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லிய

English summary
DCP Pramod Kushwaha, Delhi Police Special Cell: A terror strike has been averted as three persons have been apprehended with Improvised explosive devices (IED).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X