உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம்... உலக சுகாதார அமைப்பு வாழ்த்து
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு உலக சுகாதார அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இன்று காலை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. தடுப்பூசி போடும் பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொடங்கி வைத்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கும் மனிஷ்குமார் முதல் தடுப்பூசியைப் பெற்றார்.

இந்தியாவில் முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் என மொத்தம் மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு உலக சுகாதார அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் பக்கத்தில், "இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் என முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்தியா முழுவதும் உள்ள 3,006 தடுப்பூசி மையங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் சுமார் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். முதல் கட்டமாக ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதைக் கடந்த 27 கோடி பேருக்கும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாடு முழுவதும் கோ-வின் செயலியைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த செயலியில் பதிவு செய்து கொண்டவர்களுக்கே தடுப்பூசிகள் செலுத்தப்படும். இந்த கோ-வின் செயலி விரைவில் வெளியடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications