யார் இந்த ராம்விலாஸ்... அரசியல் பின்னணி... இந்திரா காந்தியை எதிர்த்தவர்!!
டெல்லி: மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் 1946ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி பீகார் மாநிலத்தில் இருக்கும் ககாரியா என்ற இடத்தில் பிறந்தார். தலித் குடும்பத்தில் பிறந்தவர். சட்டப் படிப்பை முடித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி டிஎஸ்பியாக பணியில் அமர்த்தப்பட்டு இருந்தார். ஆனாலும், அரசியல்தான் இவரது மூச்சாக இருந்தது.

தலைவர்
இதையடுத்து அரசியலில் நுழைய ஆர்வப்பட்டவர் சம்யுக்தா சோஷியலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து பீகார் மாநிலத்தில் தன்னை தலித்துகளின் தலைவராகவும், சிறுபான்மை மக்களின் தலைவராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.

காங்கிரஸ்
முதன் முறையாக 1960ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். இதையடுத்து அந்தக் கட்சியின் இணை செயலாளராக தேர்வு பெற்றார். இதையடுத்து, நான்கு ஆண்டுகள் கழித்து பீகார் மாநிலத்தில் லோக் தளம் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சிறிய கட்சிகளை இணைத்து பீகாரில் பெரிய தலைவராக உருவெடுத்தார்.

கைது
இதையடுத்து இவரது அரசியல் களம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. இதற்குக் காரனம 1975ஆம் ஆண்டில் எமர்ஜென்சியின்போது இவரை இந்திரா காந்தி கைது செய்து சிறையில் அடைத்தார். 1977ஆம் ஆண்டில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

தோல்வி
இதன் பின்னர் பீகார் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து எட்டு முறை லோக் சபா தேர்தலில் போட்டியிட்டார். 1984, 2009 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் இவர் தோல்வியை தழுவினார். 2009 ஆம் ஆண்டில் தோல்வி அடைந்து இருந்தாலும், பீகாரில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வு பெற்று இருந்தார்.

லோக் ஜனசக்தி கட்சி
இதன் பின்னர் 1985ஆம் ஆண்டில் லோக் தளம் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு பெற்றார். இதையடுத்து 1987ல் ஜனதா கட்சிக்கு சென்றார். இதன் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்றார். இந்தக் கட்சி 2000வது இரண்டாக உடைந்தது. பாஜகவில் இணைவதை எதிர்த்து தனிக்கட்சி துவங்கினார். அதுதான் லோக் ஜனசக்தி கட்சி. இந்தக் கட்சிக்கு தன்னை தலைவராக அறிவித்துக் கொண்டார்.

அமைச்சர்
மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்குடன் மிகவும் நெருக்கமாக பழகியவர் ராம்விலாஸ். மத்தியில் விபி சிங் பிரதமராக இருந்தபோது, இவர் 1996-98 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். துவக்கத்தில் பாஜகவை லோக் ஜனசக்தி ஆதரித்தது. 1999-2001ஆம் ஆண்டில் மத்தியில் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும், 2001-02ல் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

ரசாயனம்
தொடர்ந்து காங்கிரசை விமர்சித்து வந்த பஸ்வான் 2004 காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தார். வெற்றி பெற்ற இவருக்கும் ரசாயனம், உரம் மற்றும் ஸ்டீல் என்று இரண்டு அமைச்சரவை வழங்கப்பட்டு இருந்தது. 2009ல் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

2014 தேர்தல்
பாஜகவுடன் மீண்டும் லோக் சபா மற்றும் பீகார் சட்டசபை தேர்தலின்போது கூட்டணி அமைத்து 2014ல் போட்டியிட்டார். 2019 லோக் சப்பா தேர்தலிலும் நீடித்தது. இதையடுத்து வெற்றி பெற்றவர் மத்திய அமைச்சராக பதவியேற்றார். எதிர்கொண்டு இருக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் தன்னை ஒதுக்கிக் கொண்டு அனைத்து பொறுப்புக்களையும் தனது மகன் சிராக்கிடம் வழங்கி இருந்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications