பறந்த KISS.. நெஞ்சிலே நச்சுனு பாகிஸ்தான் கொடி.. ஒரே வீடியோவில் இளசுகளை காலி செய்த "வெள்ளை புறா".. ஆஹா
இளம் பாகிஸ்தான் ரசிகை ஒருவரின் வீடியோ ட்விட்டரில் ஷேர் ஆகி வருகிறது
டெல்லி: கிரிக்கெட் கிரவுண்ட்டில், ஃப்ளையிங் கிஸ் தந்த அந்த பெண் யார் என்றுதான் ரசிகர்கள் ஆர்வத்துடன் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. ஓவர்நைட்டில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளார் அந்த இளம்பெண்..
20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.. இதை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.
153 என்ற இலக்கை விரட்டிப்பிடித்ததில், அவர்கள் 7 விக்கெட்டுகள் & 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றனர்.. பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் 2 பேருமே அரைசதம் அடித்து, டீம் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தனர்.
நடாஷா
இதனிடையே, பாகிஸ்தான் ரசிகை நடாஷா, நவம்பர் 13 அன்று மெல்போர்னில் இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், பாபர் அசாம் தலைமையிலான அணி ரோகித் சர்மா தலைமையிலான அணியை வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. "நம்பிக்கையுடன், இந்தியா இறுதி போட்டிக்கு வரும்... அவர்களை நாம் வீழ்த்தியே ஆக வேண்டும். பாகிஸ்தான் உலகக் கோப்பைக்கு செல்கிறது" என்று நடாஷா அழுத்தமாக பதிவு செய்துள்ளார்..
எகிறும் ஆர்வம்
கிரிக்கெட் போட்டி என்றாலே, பாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் இந்தியாவே விளையாட வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.. அந்தவகையில்தான் இப்போது எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.. ரசிகர்களை போலவே, முன்னாள் இந்தியா + பாகிஸ்தான் வீரர்களும் அந்த க்ளைமாக்ஸ் நாளையே எதிர்நோக்கி உள்ளனர். பாகிஸ்தான் வீரர்களும் இந்தியாவுடனே மோத விருப்பம் தெரிவித்து உள்ளனர்...
T-20
நியூசிலாந்துடனான வெற்றிக்கு பிறகு இறுதி போட்டியில் எந்த அணியை சந்திக்க விரும்புகிறீர்கள் என்று பாகிஸ்தான் அணியின் ஷதாப் கானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு அவர், "20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்ள விரும்புகிறோம்" என்று ஆர்வத்துடன் பதிலளித்திருக்கிறார்.. இதுபோலவே, பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வானும் இந்தியாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்... இப்படி எல்லாருடைய எதிர்பார்ப்புகளும் எகிறி வரும் நிலையில், ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஃபிளையிங் கிஸ்
பாகிஸ்தான் ரசிகை ஒருவரின் வீடியோக்களும், போட்டோக்களும் திடீரென அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.. சிட்னி மைதானத்தில் நடந்த போட்டியை இந்த ரசிகை நேரில் சென்று கண்டுகளித்துள்ளார்.. வெள்ளை கலர் சுடிதாருடன் வந்த அந்த பெண், தன்னுடைய நெஞ்சில் பாகிஸ்தான், கொடியையும் அணிந்து வந்திருந்தார்.. போட்டி நடக்கும்போது, தங்கள் வீரர்களுக்கு ஃப்ளையிங் கிஸ் தந்து கொண்டே இருந்தார்.. இதனை அங்குள்ள டிவியில் நீண்ட நேரம் ஒளிபரப்பி கொண்டே இருந்தனர். அந்த பெண் யார் என்று தெரியவில்லை. இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.. இதை பார்த்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர், அந்த ரசிகையின் இன்ஸ்ட்டா அக்கவுண்ட்டை தேடி கண்டுபிடித்து தருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்..