யார் இந்த விகாஷ் யாதவ்? FBI-யால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் “ரா” ஏஜெண்ட்!
டெல்லி: இந்திய "ரா" உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான விகாஷ் யாதவ், காலிஸ்தான் தலைவர் கொலை முயற்சி வழக்கில் அமெரிக்காவின் எஃபிஐ அமைப்பால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விகாஷ் யாதவ் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். யார் இந்த விகாஷ் யாதவ்?
அமெரிக்கா கனடா இரட்டை குடியுரிமை பெற்ற காலிஸ்தான் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுனுக்கு எதிரான கொலை முயற்சியில், இந்திய முன்னாள் ரா அதிகாரி விகாஷ் யாதவ் ஈடுபட்டதாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக அமெரிக்கா தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், இணை குற்றவாளியாக விகாஷ் யாதவ் பெயரையும் குறிப்பிட்டது.

தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த எஃப்.பி.ஐ: இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகையில் புகைப்படத்துடன் தேடப்படும் குற்றவாளியாக விகாஷ் யாதவை அறிவித்து, அவர் மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விகாஷ் யாதவ் அமெரிக்காவின் FBI-யால் தேடப்படுபவர் எனவும் போஸ்டர் வெளியிடப்பட்டது. அவருக்கு எதிராக கடந்த 10ஆம் தேதி கைது வாரண்டும் பிறப்பித்தது. ஆனால், தொடர்ந்து இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது. இவை அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என இந்தியா தெரிவித்து வருகிறது.
கொல்ல சதி: இந்த வழக்கில் இணை குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளார் விகாஷ் யாதவ். இதற்கு முன்னரே நிகில் குப்தா என்பவர் குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது நிகில் குப்தாவின் இணை சதிகாரர் என விகாஷ் யாதவை குற்றம்சாட்டுகிறது அமெரிக்கா. விகாஷ் யாதவ், இந்தியாவிலிருந்து ரிமோட் மூலம், குர்பத்வந்த் சிங் பன்னுவை கொலை செய்வற்கான சதித்திட்டத்தை இயக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், விகாஸ் யாதவ் டெல்லியில் சிறப்பு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு வழக்கில் விகாஷ் யாதவை கைது செய்து அவரிடம் சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த விகாஷ் யாதவ்?: 39 வயதான விகாஷ் யாதவ், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் RAW உளவு அமைப்பின் முன்னாள் ஊழியர். இதற்கு முன் அவர் சிஆர்பிஎப்பில் பணியாற்றி வந்தார். போர்க்கப்பல் மற்றும் ஆயுதங்கள் தொடர்பாக சிறப்புப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விகாஷ் யாதவ் பற்றிய உடல் விளக்கத்தை FBI வெளியிட்டது. அதன்படி அவருக்கு 39 வயது, 5 அடி 10 அங்குலம் உயரம் கொண்டவர், சுமார் 175 பவுண்டுகள் எடை. கருப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர். தலைமறைவாக இருக்கும் விகாஷ் யாதவ் தொடர்புடைய தகவல் தெரிந்தவர்கள் தங்கள் அருகிலுள்ள FBI அலுவலகம் அல்லது அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு FBI தெரிவித்தது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications