இன்னைக்கு ஒரு புடி! உலகமே கொண்டாடும் பட்டர் சிக்கன்.. கண்டுபிடித்தது இவங்க தானா! எதிர்பார்க்கவே இல்ல
டெல்லி: நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருக்கும் பட்டர் சிக்கனை சுற்றி ஒரு முக்கிய வழக்கு நடந்து வருகிறது. உணவு குறித்து என்ன கேஸ்.. அதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவின் மிகவும் பிரியமான உணவுகளில் ஒன்று பட்டர் சிக்கன்.. நான், புல்கா, சப்பாத்தி போன்ற உணவுகளுக்குப் பட்டர் சிக்கன் தான் மிகவும் ஏற்ற உணவாக இருக்கும். இந்தியா மட்டுமின்றி பிரிட்டனிலும் கூட பலருக்கும் இந்த பட்டர் சிக்கன் தான் மிகவும் பிடித்த ஒரு உணவாக இருக்கிறது.

அசைவ பிரியர்களுக்குப் பட்டர் சிக்கன் என்றால் சைவம் சாப்பிடுவோருக்கு தால் மக்கானி,, ஒட்டுமொத்த உலகமுமே இந்த இரு உணவுகளையும் தான் விரும்பி போட்டிப் போட்டுச் சாப்பிட்டு வருகிறார்கள்.
பட்டர் சிக்கன்: இப்படியிருக்க திடீரென ஒரு பிரச்சினை வந்தது. அதாவது பட்டர் சிக்கனை கண்டுபிடித்து யார் என்பது தான் அந்த கேள்வி.. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. நமது தலைநகர் டெல்லியில் உள்ள இரண்டு புகழ்பெற்ற உணவகங்களான மோதி மஹால் மற்றும் தர்யாகஞ்ச் ஆகிய இரு ஹோட்டல்களும் தாங்கள் தான் இந்த உணவைக் கண்டுபிடித்ததாக வாதிட்டார்கள்.
மோதி மஹாலின் உரிமையாளர்கள் தர்யாகஞ்ச் உணவகத்தின் உரிமையாளர்களுக்கு எதிராக முதலில் வழக்கு தொடர்ந்தார். தர்யாகஞ்ச் உணவகம் தாங்கள் தான் பட்டர் சிக்கன் மற்றும் தால் மக்கானியை கண்டுபிடித்தவர்கள் என்று விளம்பரப்படுத்திய நிலையில், அதற்கு எதிராகவே மோதி மஹால் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார்.
அறிக்கை: இந்த வழக்கு கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதலில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சஞ்சீவ் நருலாவ் இந்த வழக்கில் தர்யாகஞ்ச் ஹோட்டல் உரிமையாளர் ஒரு மாதத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும், மோதி மஹால் உரிமையாளர்களும் தங்கள் தரப்பு விளக்கத்தை மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். தங்கள் மூதாதையர் மறைந்த குண்டல் லால் குஜ்ரால் என்பவர் பிரிவினைக்குப் பின் இந்த உணவுகளை உருவாக்கியதாகக் குறிப்பிட்டனர். அந்த சமயத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாத நிலையில் தந்தூரிக் சிக்கன் பிரிட்ஜ் இல்லாமல் வீணாகியுள்ளது. இதை என்ன செய்யலாம் என குஜ்ரால் யோசித்த போது தான் அவருக்குப் பட்டர் சிக்கன் ஐடியா வந்துள்ளது.
உருவானது இப்படிதான்: குளிர்சாதனப் பெட்டியின்றி காய்ந்துபோகும் தந்தூரிக் சிக்கனை ரீஹைட்ரேட் செய்யவும், அதன் சுவையை மேம்படுத்தவும் தக்காளி, வெண்ணெய், க்ரீம் மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்ட மக்கானி சாஸை குஜ்ரால் கண்டுபிடித்தார். அதேபோல சைவம் சாப்பிடுவோருக்கு இதேபோல தால் மக்கானியை கண்டுபிடித்தார் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
அதேநேரம் மறுபுறம் தர்யாகஞ்ச் உணவகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் சிபல், குஜ்ரால் கதைக்கு ஆதாரமே இல்லை என்று கூறி மறுத்தது. மேலும், தர்யாகஞ்ச் உணவகம் தவறாக எதையும் சொல்லவில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.
சுவாரசியம்: இதில் சுவாரசியம் என்னவென்றால் மோதி மஹாலை தொடங்கிய குஜ்ரால் மற்றும் தர்யாகஞ்ச் உணவகத்தைத் தொடங்கிய ஜக்கி ஆகிய இருவரும் சேர்ந்து தான் முதலில் மோதி மஹால் என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்தனர். இது பாகிஸ்தானின் பெஷாவரில் இயங்கி வந்தது. இருவரும் சேர்ந்து நடத்தி வந்த உணவகத்திலேயே இந்த பட்டர் சிக்கன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு அடுத்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications