பரவும் விஷம்.. காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி.. பதற வைக்கும் தகவல்..!
காற்று மாசுபாட்டால் 70 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று கூறப்படுகிறது
டெல்லி: ஒவ்வொரு வருடமும் காற்று மாசுபாட்டால் 70 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீப காலமாகவே நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இல்லை... பெருமளவு மாசு கலந்து உள்ளது.. இதற்கு, பெருகிவரும் தொழிற்சாலைகள், வாகனங்களும் பிரதான காரணமாக இருக்கின்றன..
ஒருபக்கம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடுகிற நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்சைடுகள், மற்றொரு பக்கம் வாகனங்களில் இருந்து வெளிவருகிற ஹைட்ரோகார்பன்கள், கார்பன்மோனாக்சைடு போன்றவையும்தான் காற்றை மாசுபடுத்த காரணமாக அமைந்து வருகின்றன.

அறிக்கை
இப்படிப்பட்ட நச்சு காற்றை சுவாசிப்பது நுரையீரல்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.. இறுதியில் மரணம் வரை சென்றுவிடுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், உலக சுகாதார அமைப்பு காற்றுமாசு தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.. 2005-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் அப்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:

உயிரிழப்பு
காற்று மாசுபடுவது, மனித குலத்தின் ஆரோக்கியத்துக்கே எதிராக அமைந்து வருகிறது.. காற்று மாசுபாட்டால் உலகமெங்கும் வருடத்துக்கு 70 லட்சம் பேர் உரிய காலத்துக்கு முன்பாகவே உயிரிழக்கிறார்கள்.. இஸ்கிமிக் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவைகள் வயது முதிர்ந்தவர்களை தாக்குகிறது.. இதனால் அவர்களின் மரணத்துக்கு முன்பேயே இறக்கும் சூழலும் ஏற்பட்டுவிடுகின்றன.

காற்று
அதேபோல, நீரிழிவு, நரம்பு நோய்கள் போன்ற பிற விளைவுகளுக்கும் சான்றுகள் இருக்கின்றன... காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களின் ஆபத்து என்பது புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றதற்கு சமமாகும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது... அதேசமயம், புதிய வழிகாட்டுதலின் கீழ் பி.எம். 2.5 நிலைக்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பை ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோ கிராமில் இருந்து 5 மைக்ரோ கிராமாக உலக சுகாதார நிறுவனம் குறைத்திருக்கிறது...

வழிகாட்டுதல்
இதைதவிர, பி.எம். 10த்திற்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பானது, 20 மைக்ரோ கிராமில் இருந்து 15 மைக்ரோ கிராமாக குறைக்கப்பட்டுள்ளது... நகரமயமாக்கலும் பொருளாதார வளர்ச்சி எதிரொலியாக பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரித்து வருவதாலும்தான், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் மக்கள் காற்றுமாசினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலக்கம்
காற்றின் தரத்தை மேம்படுத்துவது காலநிலை மாற்றத்தை சரிசெய்ய உதவும் என்றும் மாசு காற்றை சுவாசிப்பதால், இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு மரணங்களின் விகிதம் அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது கலக்கத்தை தந்து வருகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications