வாய் திறந்தாலே சர்ச்சை.. மத்திய அமைச்சராகும் பாண்டி சஞ்சய்.. தெலுங்கானாவில் இருந்து 2 மொத்தம் பேர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடி அமைச்சரவையில் தெலுங்கு பேசும் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் இருந்து இருவர் அமைச்சராகப் பதவியேற்றுள்ளனர். யார் இவர்கள்.. பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இப்போது பிரதமராகப் பதவியேற்றுள்ளார். என்டிஏ கூட்டணி ஆதரவுடன் மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றார். நேருவுக்குப் பிறகு ஒருவர் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.

Narendra Modi oath ceremony Telangana BJP NDA cabinet ministers

அவருடன் மற்ற மத்திய அமைச்சர்களும் பதவியேற்று இருக்கிறார்கள். இதில் தெலுங்கானாவில் இருந்து இரண்டு பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுகிறார்கள்.

இரண்டு பேர்: தெலுங்கானா மாநில பாஜக தலைவரும் மோடி 2.oஇல் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவருமான ஜி. கிஷன் ரெட்டிக்கு மீண்டும் இந்த முறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. தெலுங்கானாவில் பாஜக பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அதற்கு அங்கீகாரம் தரும் வகையில் ஜி. கிஷன் ரெட்டி அமைச்சரவையில் தொடர்கிறார்.

கிஷன் ரெட்டி: கிஷன் ரெட்டி செகந்திராபாத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தெலுங்கானாவில் உள்ள மற்ற பாஜக தலைவர்கள் போல இல்லாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் என்ற பெயரைப் பெற்றவர்.. சீனியாரிட்டி அடிப்படையில் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

பாண்டி சஞ்சய்: அதேபோல கரீம்நகர் எம்பி பாண்டி சஞ்சய்க்கும் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தெலுங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் இருந்த போது, மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே இல்லை என்ற சூழல் இருந்தது. அப்போது கேசிஆர் மீது ஆக்ரோஷமான விமர்சனங்களை வைத்து தெலுங்கானாவில் பாஜகவை அங்கு முதலில் உயிர்ப்பித்தவரே இந்த பாண்டி சஞ்சய் தான்.. கடந்த 5 ஆண்டுகளாகத் தெலுங்கானாவில் தனது சர்ச்சை பேச்சுகள் மூலம் பாஜகவை அங்கு லைம் லைட்டிலேயே வைத்திருந்தவர். சர்ச்சை பேச்சுகளுக்குச் சொந்தக்காரரான இவருக்கும் மோடி 3.oஇல் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

இந்த இருவருமே ஆர்எஸ்எஸில் இருந்து வந்தவர்கள்.. தெலுங்கானாவில் இருந்து மொத்தம் 8 பேர் பாஜக சார்பில் எம்பியாக தேர்வாகி இருக்கும் நிலையில், இந்த இருவரை தவிர மற்ற 6 பேருமே தெலுங்கு தேசம், காங்கிரஸ் அல்லது பிஆர்எஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்கள். இவர்கள் இருவர் மட்டுமே நேரடியாக ஆர்எஸ்எஸில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சாதி ரீதியாக பார்த்தாலும் இவர்கள் இருவருக்கும் அமைச்சர் பதவி என்பது முக்கியமானது தான். ஏனென்றால் கிஷன் ரெட்டி மற்றும் பாண்டி சஞ்சய் ஆகியோர் அங்குள்ள இரு முக்கிய சாதிகளான ரெட்டி மற்றும் முன்னுரு காபு சமூகங்களை சேர்ந்தவர்கள். குறிப்பாக சஞ்சய் வடக்கு தெலுங்கானாவைச் சேர்ந்தவர். அங்கு பாஜக வளர்ந்து வரும் நிலையில், இவருக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+