Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த வழக்குக்கு 98 நாட்கள் திகார் சிறையா.. ப.சிதம்பரத்தை சந்தித்த சசிதரூர் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

Why 98 days judicial custody for P. Chidambaram, asks Shashi Tharoor

அவரை 27-ஆம் தேதி வரை திகார் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூர் திகார் சிறைக்கு சென்று ப சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.

அவருடன் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி ஆகியோர் உடனிருந்தனர். ப சிதம்பரத்துடனான சந்திப்புக்கு பின்னர் சசி தரூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் 98 நாட்கள் ப சிதம்பரத்துக்கு சிறை வாசம் எதற்கு? இந்த வழக்கு ஒன்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினை அல்ல. அரசியலமைப்பின் அடிப்படை கடமை மீறப்படுகிறது. அவருடன் நாங்கள் இருக்கிறோம். ஒற்றுமையை காட்டவே நாங்கள் வந்தோம் என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மூத்த தலைவர்களும் சந்தித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+