2014-ல் பொது தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஏன்..புத்தகத்தில் பிரணாப் கூறிய காரணம் இதுதான்!
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள புத்தகத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமர் பதவிக்கு சோனியா காந்தியின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. இந்தியர் அல்லாத ஒருவரை பிரதமராக தேர்வுசெய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்படலாம் என எண்ணிய நிலையில் திடீரென மன்மோகன் சிங் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று மன்மோகன் மீண்டும் பிரதமராக 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

பிரணாப் முகர்ஜி
பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரணாப் முகர்ஜி நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதனிடையே கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.

மக்களவை தேர்தல்
இதையடுத்து அவர் 2016-இல் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் 2014-இல் மக்களவை தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி பெற்றது. பாஜக மூத்த தலைவர் நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜிதான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பிரெஸிடென்சியல் இயர்ஸ்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். இந்த நிலையில் 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நான் பிரதமராகியிருந்தால் 2014-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றியிருக்காது என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தம்மிடம் கூறியதாக பிரணாப் முகர்ஜி பிரெஸிடென்சியல் இயர்ஸ் என்ற தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

பிரதமர்
அவரது பதவிக்காலத்தின்போது நடைபெற்ற சம்பவங்களையும் அந்த புத்தகத்தில் பிரணாப் குறிப்பிட்டுள்ளார். இது வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் விற்பனைக்கு வருகிறது. அந்த புத்தகத்தில் அவர் மேலும் கூறியிருக்கையில், 2004-இல் நான் பிரதமராகியிருந்தால் காங்கிரஸ் கட்சி 2014-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோற்றிருக்காது.

உள்விவகாரங்கள்
சோனியா காந்தியால் கட்சியின் உள்விவகாரங்களை கையாள முடியவில்லை. பிரதமர் மன்மோகன் தனிப்பட்ட முறையில் எம்பிக்களுடன் தொடர்பில்லாமல் இருந்ததும் காங்கிரஸ் தோற்றதற்கு ஒரு காரணமாகும். மன்மோகன் கூட்டணியை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தார். ஒரு சர்வாதிகாரியாகவே தனது ஆட்சியை நடத்தினார் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications