ஸ்டாலின், மமதா, நிதிஷ், அகிலேஷ் வரலை..I.N.D.I.A bloc நாளைய கூட்டம் ஒத்திவைப்பு-அடுத்து எப்போது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "இந்தியா" கூட்டணியின் முக்கிய தலைவர்களான மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி, நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்க இயலாது என்பதால் நாளைய ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் "இந்தியா" கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 17 என்றும் டிசம்பர் 18 எனவும் இருவித தகவல்கள் வெளியாகி உள்ளன.

"இந்தியா" கூட்டணி என்பது லோக்சபா தேர்தலுக்காக பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியாக உருவாக்கப்பட்டது. "இந்தியா" கூட்டணியும் கிடுகிடுவென ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் "இந்தியா" கூட்டணி கை கழுவப்பட்ட நிலைக்கு போனது. இது கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானது.

Why INDIA blocs tomorrow meeting Postponed?

தற்போது 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானாவில் மட்டும் வென்றுள்ளது. சத்தீஸ்கர்- ராஜஸ்தானில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. மிசோரமில் காங்கிரஸை பாஜக முந்திவிட்டது. இந்த நிலையில் திடீரென டிசம்பர் 6-ந் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தங்களுக்கு ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், உடல்நலன் பாதிப்பால் ஜேடியூ தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவித்தார்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல முடியாத அளவுக்கு தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை முழுவீச்சில் முதல்வர் ஸ்டாலின் முடுக்கி விட்டிருப்பதால் டெல்லி கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இதனையடுத்து டெல்லியில் நாளை நடைபெற இருந்த "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில் "இந்தியா" கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 18-ந் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், டிசம்பர் 17-ந் தேதி அடுத்த "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதனால் "இந்தியா" கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 17 அல்லது டிசம்பர் 18 என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+