ஏற்றுமதியாகும் இந்திய தடுப்பூசிகள்... உள்நாட்டில் விற்பனையாகாததற்கு இது தான் காரணம்
டெல்லி : இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகள் இதுவரை 13 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் உள்நாட்டில் போதிய அளவு விற்பனையாகவில்லை. இதனை தனியார் நிறுவனங்கள் சந்தைகளில் விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தடுப்பு மருந்து உற்பத்தியில் உலகின் மிகப் பெரிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. இதில் சீனாவையும் இந்தியா மிஞ்சி உள்ளது. தற்போது புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் தான் ஒரு நிமிடத்திற்கு 5000 டோஸ் கோவிட் தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த மருந்துகள் வங்கதேசம், பூடான், மாலத்தீவு, மங்கோலியா, மியான்மர், நேபாளம், பஹ்ரைன், பிரேசில், மொரீசியஸ், மொராக்கோ, ஓமன், சீசெல்ஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு மில்லியன் டோஸ் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மருந்துகளை உள்நாட்டில் விற்பனை செய்ய தங்களுக்கு அனுமதி அளிக்கும்படி முன்னணி தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இது பற்றி அவர்கள் கூறுகையில், எங்களுக்கு நாள் ஒன்றிற்கு 2 மில்லியன் தடுப்பு மருந்துகள் மட்டும் தான் தேவை. தனியார் மருத்துவமனைகளும் பொது மக்களுக்கு செலுத்த துவங்க முடியும். ஆனால் இதனால் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பற்றாக்குறை ஏற்படாது என்கின்றனர்.
அதே சமயம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மருந்துகளை அளிக்க அரசு தயங்கி வருகிறது. இது பற்றி நிதி ஆயோக் அமைப்பின் டாக்டர் வி.கே.பால் அளித்துள்ள விளக்கத்தில், முன்னுரிமை அடிப்படையில் அனைத்து நாடுகளுக்கும் இது
அனுப்பப்பட்டு வருகிறது. நீங்கள் ஆரோக்கியமானவராகவும், 50 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருந்தால், நீங்கள் காத்திருக்க வேண்டும். உங்களை விட அதிக தேவை இருக்கும் நபருக்கு அது முதலில் செலுத்தப்படும். பொது மக்களின்
ஆரோக்கியத்தில் பொறுப்பு அதிகம் உள்ளது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், முதல் 7 லிருந்து 8 மாதங்களுக்கு 30 கோடி பேருக்கு இதனை செலுத்த கவனம் செலுத்தி வருகிறோம். அதிக தேவை உள்ளவர்கள் யார் என்பதை நாங்கள் அறிவோம். ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்கள், 2 கோடி மன்களப் பணியாளர்கள் முதல் பட்டியலில் உள்ளனர். அடுத்தபடியாக 27 கோடி பேர் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களாகவும், வேறு சில நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களாகவும் உள்ளனர் . தனியாரிடம் ஒப்படைத்தால் இது சரியாக நடைபெறுமா என தெரியவில்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications