"பெட்ரோலை முழுசா நிரப்பாதீங்க.. கோடை வெப்பத்தால் வெடிக்குமாம்?" உண்மை என்ன.. நாம் என்ன செய்யணும்
டெல்லி: கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில், எரிபொருளை முழு டேங்க் அளவுக்கு நிரப்ப வேண்டாம் என்று இணையத்தில் தகவல் பரவியது. இதைப் பலரும் ஷேர் செய்த நிலையில், உண்மையில் முழு டேங்க் நிரப்புவது ஆபத்தானதா என்பதைப் பார்க்கலாம்.
இந்தியாவில் இப்போது கோடை வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் வெப்ப நிலை தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தைக் கடந்தே பதிவாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக மழை பெய்தாலும் கூட கோடை வெயில் அதிகமாகவே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அதீத வெப்பம் காரணமாகப் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல்: வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெப்பம் குறித்தும் கோடைக் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பது குறித்தும் இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அப்படித்தான் சமீபத்தில் இணையத்தில் ஒரு போஸ்டர் வேகமாகப் பரவியது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளதாக பல்வேறு மொழிகளிலும் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

அதில் வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கலாம் என்பதால் வாகனங்களில் எரிபொருளை முழு டேங்க் அளவுக்கு நிரப்ப வேண்டாம் என்றும் இது வாகனம் வெடிக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. நெட்டிசன்கள் பலரும் இதைப் பகிர்ந்தனர். வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அது டிரெண்டிங் ஆனது.
எச்சரிக்கை: அந்த அறிவிப்பில், "இந்தியன் ஆயில் எச்சரிக்கை.. வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் எரிபொருளை முழுமையாக நிரப்ப வேண்டாம். இது எரிபொருள் டேங் வெடித்துச் சிதறும் வாய்ப்பை ஏற்படுத்தும். எனவே, தயவு செய்து உங்கள் வாகனத்தில் பாதி எரிபொருளை மட்டும் நிரப்புங்கள். காற்று செல்ல இடமளிக்கவும். இந்த வாரம் மட்டும் பெட்ரோலை முழுமையாக நிரப்பிய 5 வாகனங்கள் வெடித்துச் சிதறியுள்ளது.
பெட்ரோல் டேங்கில் வாயு செல்ல அனுமதிக்கவும். இதை உங்களுக்குக்கு தெரிந்த அனைவருக்கும் அனுப்புங்கள். இதன் மூலம் விபத்துகள் தடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டை பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பரவ இது டிரெண்டிங் ஆனது. பொதுமக்களின் நலனுக்காக இந்தியன் ஆயில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவே பலரும் நினைத்து ஷேர் செய்தனர்.
உண்மை என்ன: இதனிடையே இது குறித்து இந்தியன் ஆயில் சார்பிலும் மத்திய அரசின் பிஐபி சார்பிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியன் ஆயில் கூறுகையில், "இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு.. வெயில் காலமோ, குளிர் காலமோ எப்போது என்று இருந்தாலும் வண்டியை உற்பத்தி செய்த நிறுவனம் அனுமதிக்கும் அளவுக்கு எரிபொருளை நிரப்புவது முற்றிலும் பாதுகாப்பான ஒன்று தான்" என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிஐபி அமைப்பும் இதையே தங்கள் சமூக வலைத்தளங்களிலும் ஷேர் செய்துள்ளன. அதாவது கோடைக் காலம் என்று இல்லை எந்த கிளைமேட் நிலவினாலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு முழு டேங்கை நிரப்புவதால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பதே உண்மை
பாதுகாப்பானது ஏன்: ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களில் உட்சபட்ச பாதுகாப்பு கட்டமைப்புகளை வைத்திருக்கும். பெட்ரோல்/ டீசல் நிரப்புவதில் அதிகபட்ச அளவும் அதில் விதிவிலக்கல்ல. எனவே, எந்த கிளைமேட்டாக இருந்தாலும் ஓவர் ஃபில் செய்யாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதை நிரப்புவது பாதுகாப்பானதே..
மேலும், பெட்ரோல் தானாக எரியும் வெப்பநிலை (self-igniting temperature) என்பது 246 முதல் 280 டிகிரி செல்சியஸ் வரை ஆகும். அதேபோல டீசலுக்கு இது 210 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்தியாவில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டுவதில்லை. அதாவது அது தானாக எரியும் வெப்பத்தை விட இது மிக மிக குறைவாகவே உள்ளது. எனவே, பெட்ரோல் அல்லது டீசல் எதுவும் நிச்சயம் தீப்பிடிக்காது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications