என்ஆர்சி குறித்து சோனியா ஏன் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை? கேட்கிறார் பிரசாந்த் கிஷோர்
டெல்லி: என்.ஆர்.சி குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அதிகாரப்பூர்வ அறிக்கையை எதையுமே இதுவரை வெளியிடாதது ஏன் என்று ஜேடியூ துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜேடியூ இடம்பெற்ற போதும் சிஏஏ, என்.ஆர்.சி. ஆகியவற்றை அதன் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் கடுமையாக எதிர்த்து வருகிறார். இது ஜேடியூவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாவது:
10-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் என்.ஆர்.சியை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கூறியுள்ளனர். நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், மமதா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் இதனை அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இதில் திட்டவட்டமான எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸை பொறுத்தவரையில் செயற்குழுதான் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு. இதுவரையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் என்.ஆர்.சி.யை அமல்படுத்தமட்டோம் என அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஏன் வெளிப்படையாக அறிக்கை எதனையுமே வெளியிடவில்லை?
குடியுரிமை சட்ட திருத்தம் என்பது 2003-ல் உருவாக்கப்பட்டது. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ்தான் மத்திய அரசில் இருந்தது. இந்த சட்ட திருத்தம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனில் காங்கிரஸ் ஆட்சியில் உரிய திருத்தம் கொண்டு வந்திருக்கலாமே? ஏன் அதை காங்கிரஸ் செய்யவில்லை?
என்.பி.ஆர்., என்.ஆர்.சி இரண்டும் தொடர்புடையது அல்ல என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவதை ஏற்க முடியாது. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை யாரும் நிரூபிக்க வேண்டிய தேவையும் இல்லை. மேற்கு வங்க தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் மோடியும் என்.ஆர்.சி. குறித்து பேசியுள்ளார். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications