என்ஆர்சி குறித்து சோனியா ஏன் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை? கேட்கிறார் பிரசாந்த் கிஷோர்
டெல்லி: என்.ஆர்.சி குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அதிகாரப்பூர்வ அறிக்கையை எதையுமே இதுவரை வெளியிடாதது ஏன் என்று ஜேடியூ துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜேடியூ இடம்பெற்ற போதும் சிஏஏ, என்.ஆர்.சி. ஆகியவற்றை அதன் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் கடுமையாக எதிர்த்து வருகிறார். இது ஜேடியூவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாவது:
10-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் என்.ஆர்.சியை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கூறியுள்ளனர். நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், மமதா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் இதனை அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இதில் திட்டவட்டமான எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸை பொறுத்தவரையில் செயற்குழுதான் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு. இதுவரையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் என்.ஆர்.சி.யை அமல்படுத்தமட்டோம் என அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஏன் வெளிப்படையாக அறிக்கை எதனையுமே வெளியிடவில்லை?
குடியுரிமை சட்ட திருத்தம் என்பது 2003-ல் உருவாக்கப்பட்டது. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ்தான் மத்திய அரசில் இருந்தது. இந்த சட்ட திருத்தம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனில் காங்கிரஸ் ஆட்சியில் உரிய திருத்தம் கொண்டு வந்திருக்கலாமே? ஏன் அதை காங்கிரஸ் செய்யவில்லை?
என்.பி.ஆர்., என்.ஆர்.சி இரண்டும் தொடர்புடையது அல்ல என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவதை ஏற்க முடியாது. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை யாரும் நிரூபிக்க வேண்டிய தேவையும் இல்லை. மேற்கு வங்க தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் மோடியும் என்.ஆர்.சி. குறித்து பேசியுள்ளார். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications