வங்கி கடன் இஎம்ஐ சலுகையை நீட்டிக்க திட்டவட்டமாக மறுத்த ரிசர்வ் வங்கி... பின்னணி என்ன?
டெல்லி: கொரோனா ஊரடங்கால் அறிவிக்கப்பட்ட வங்கி கடனுக்கான மாதத்தவணை சலுகையை கூடுதலாக நீட்டிக்க முடியாது என ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இதற்கான பின்னணியை இப்போது பார்ப்போம்.
கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் முழு ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதனால் மக்கள் பொருளதார நெருக்கடிக்கு உள்ளானதால் ரிசர்வ் வங்கி, வங்கி கடன் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாத தவணையை செலுத்துவதில் இருந்து மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கியது.
ஆனால் 6 மாதத் தவணையை செலுத்தாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தன. இதனால் இந்த சலுகையை பயன்படுத்திய பொதுமக்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சிறுகுறு நிறுவனத்தார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் நடைமுறையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

மத்திய அரசு அறிவிப்பு
இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மாதத் தவணை, வீட்டுக்கடன், சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாங்கிய ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கான. 6 மாதத்துக்கான வட்டிக்கு வட்டியை ரத்து செய்வதாக அறிவித்தது.

நீட்டிக்க முடியாது
இந்த வழக்கில் ரிசர்வ் வங்கியும் நேற்று புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ரூ.2 கோடி வரையிலான அனைத்து கடன்களுக்குமான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்யும் மத்திய அரசின் அறிவிப்பை ஏற்றுகொள்கிறோம். ஆனால், வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க வாய்ப்பே இல்லை. கூடுதலாக புதிய சலுகை எதுவும் வழங்க இயலாது

பணப்புழக்கத்தில் சிக்கல்
ஏனெனில் அப்படி செய்தால் கடன் வாங்கியவர், வாங்குபவர் ஆகியோரின் நடத்தை முற்றிலும் பாதித்துவிடும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அதுசார்ந்த அபாயங்களை ஏற்படுத்தும். அத்துடன் தவணை தள்ளிவைப்பு போன்ற. நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும். இந்த சலுகைகளை வழங்கினால் வரும் காலத்தில் பணப்புழக்கத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும்.

வட்டிக்கு வட்டி வசூல்
கடன் தொகையை திருப்பி செலுத்தும் அவகாசத்தை 2 ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும். ஆனால், வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது. அவ்வாறு செய்வதால், அது வங்கி நடைமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எவ்வளவு பெரிய கப்பலாக இருந்தாலும் தரைக்கு வரும் பட்சத்தில் கரை தட்டி தான் நின்று கொண்டிருக்க வேண்டும். எனவே வங்கி கடன் விவகாரத்தில் எங்கள் கோரிக்கையை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறியது. இந்த வழக்கு வரும் 13ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications