ஆசிய சிறுத்தையை தவிர்த்து ஆப்பிரிக்க சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டது ஏன்? ஆய்வாளர்கள் விளக்கம்
இந்தியாவில் சிறுத்தைகளுக்கு கரடிகள், காட்டு நாய்கள், மற்றும் ஓநாய்களும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
டெல்லி: இன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து சுமார் 12 சிறுத்தைகள் இந்தியா வரும் நிலையில், ஏன் ஆசிய கண்டத்தில் இருக்கும் சிறுத்தையை இந்தியாவுக்கு கொண்டுவரவில்லை? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு ஆப்பிரிக்க விலங்கியல் ஆய்வாளர் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவில் 1947ம் ஆண்டுக்கு பின்னர் யாரும் சிறுத்தையை பார்க்கவில்லை. இதனையடுத்து 1952ம் ஆண்டு நாட்டில் எங்கும் சிறுத்தை இல்லையென்றும், உலகிலேயே மிக வேகமாக ஓடும் ஒரு உயிரினத்தை தேசம் இழந்துவிட்டது என்றும் அப்போதைய காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதன் பின்னர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் சிறுத்தை குறித்த பேச்சுக்கள் கதைகளில் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக அடிப்பட்டது.
இந்நிலையில் ஏன் இந்தியாவுக்கு மீண்டும் சிறுத்தைகளை கொண்டுவரக் கூடாது? என்று கேள்வியெழுந்ததையடுத்து தற்போதைய மத்திய அரசு இதற்கான முயற்சிகளை தொடங்கியது. தென்னாப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு வந்தன. இதனை பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தில் உள்ள 'குனோ' பூங்காவில் திறந்து வைத்தார். இதன் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு சிறுத்தைகள் வந்தன.

ஆசிய சிறுத்தைகள்
ஆனால் இந்தியாவுக்கு ஏன் ஆசிய சிறுத்தைகளை கொண்டு வராமல் ஆப்பிரிக்க கண்டத்தின் சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டது? என்று பரவலாக கேள்வியெழுப்பப்படுகிறது. இதற்கு தென்னாப்பிரிக்காவின் கால்நடை மருத்துவரும், இந்தியாவுக்கு மீண்டும் சிறுத்தைகளை கொண்டுவரும் திட்டத்தில் செயலாற்றி வரும் முக்கிய நபருமான வின்சென்ட் வான் டெர் மெர்வே விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, "இந்த கேள்வி மிகவும் நியாயமானதுதான். ஏனெனில் ஆப்பிரிக்க சூழலும், ஆசிய சூழுலும் ஓரளவு ஒத்து இருந்தாலும், கணிசமான அளவு வேறுபட்டுள்ளன. இங்கு இருக்கும் விவசாய நிலப்பரப்பு போல எங்கள் நாட்டில் கிடையாது.

ஆப்பிரிக்க சிறுத்ததை
எனவே மீண்டும் இந்தியாவில் ஆசிய சிறுத்தைகள்தான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு காலத்தில் ஆசிய கண்டம் முழுவதும் வாழ்ந்து வந்த சிறுத்தைகள் தற்போது ஈரானில் மட்டும்தான் இருக்கிறது. அதுவும் வெறும் 30-40 எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இந்த குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிறுத்தைகளை சிங்கம் மற்றும் புலியின் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருவது என்பது அக்னி பரீட்சையை போன்றதாகும். ஒரு வேலை இப்படி கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளும் இறந்து போனால் நம்மால் மீண்டும் ஆசிய சிறுத்தைகளை பார்க்கவே முடியாமல் போய்விடலாம்.

அச்சுறுத்தல்கள்
ஆனால் ஆப்பிரிக்க சிறுத்தைகளின் கதையே வேறு. இந்த சிறுத்தைகள் ஆசிய சிறுத்தைகளை விட சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் சிங்கத்தையோ, புலியையோ நேருக்கு நேர் எதிர்கொண்டால் என்ன செய்வதென்றும் இதற்கு தெரியும். இந்தியாவில் சிறுத்தைகளுக்கு கரடிகள், காட்டு நாய்கள், மற்றும் ஓநாய்களும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே இவற்றை இந்த சிறுத்தைகள் எதிர்கொள்ளும்போது எதிர்திசையில் ஓடிவிடும். இப்படி ஓடும் சிறுத்தைகளை துரத்தி பிடிப்பது சாத்தியமற்றது. மட்டுமல்லாது நல்ல ஆரோக்கியமான எந்த நோயும் இல்லாத சிறுத்தைகள்தான் இந்தியாவுக்கு வருகின்றன" என்று கூறியுள்ளார்.

வித்தியாசம்
அதேபோல பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும் கால்நடை மருத்துவ வனவிலங்கு நிபுணருமான அட்ரியன் டோர்டிஃப் கூறுகையில், "இந்தியாவை பொறுத்த அளவில் குடியிருப்புகளுக்கு எந்த வேலியும் கிடையாது. ஆனால் ஆப்பிரிக்காவில் அனைத்து வீடுகளும் வேலிகளால் சூழப்பட்டிருக்கும். எனவே இந்தியாவில் காட்டு விலங்குளை மக்கள் பெரியதாக தொந்தரவு செய்வது கிடையாது. இம்மாதிரியான மக்களுக்குக்காக சிறுத்தைகளை இடமாற்றம் செய்வது பெருமைக்குரியதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications