நீதிபதி மீது விமர்சனம்-2-வது மன்னிப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய துக்ளக் குருமூர்த்தி மறுப்பு!
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில் துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி 2-வது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
2018-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி முரளிதர் குறித்து ட்விட்டர் பக்கத்தில் துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்திருந்த கருத்துகள் சர்ச்சையாகின. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியன், துக்ளக் குருமூர்த்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்தது.

இவ்வழக்கில் துக்ளக் குருமூர்த்தி ஏற்கனவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் தமது பதிவையும் நீக்கி இருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே பிரமாணப் பத்திரத்தையும் குருமூர்த்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போதும் நீதிபதி தல்வந்த்சிங், துக்ளக் குருமூர்த்தி இரு வரியில் நிபந்தனையற்றி மன்னிப்பு கேட்டு புதியதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார் பிரச்சனை முடிந்துவிடும் என வலியுறுத்தினர்.
ஆனால் துக்ளக் குருமூர்த்தி தரப்பிலோ, மன்னிப்பு கேட்டு பதிவுகளும் நீக்கப்பட்டுவிட்டன; இது தொடர்பாக ஏற்கனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டோம்; புதியதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை ஜூன் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி முரளிதர் தற்போது ஒடிஷா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். கடந்த ஆண்டு நீதிபதி முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு இதற்கு ஒப்புதல் தரவில்லை. இதனால் தமது பரிந்துரையை உச்சநீதிமன்றம் திருமபப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications