Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மீண்டும் ஸ்டேடியத்தின் மேல் மழை மேகங்கள்.." ஐபிஎல் பைனல் மழையால் பாதிக்கப்படுமா! வெதர்மேன் நறுக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐபிஎல் இறுதிப் போட்டி இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மழையால் போட்டி பாதிக்கப்படுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வந்துவிட்டாலே கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் தொடங்கியது

 Will Rain affect IPL finals between CSK and Gujarat waht tamilnadu weatherman says

முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில், இப்போது இறுதிப் போட்டியிலும் மீண்டும் அதே இரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளும் தான் புள்ளிப்பட்டியலிலும் டாப் இடத்தில் இருந்தனர்.

ஐபிஎல் பைனல்ஸ்:

16-வது ஐபிஎல் தொடரின் பைலனஸ் இன்று குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் தல தோனி தலைமையிலான மஞ்சள் படை அணியும் ஹர்திக் பண்ட்யாவின் குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. இந்தப் போட்டி முதலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. இருப்பினும், நேற்றைய தினம் மழை கொட்டி தீர்த்தால் போட்டி ரிசர்வ் நாளான இன்று ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று மாலை 7.30 மணிக்குத் திட்டமிட்டபடி போட்டி ஆரம்பித்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. இதில் ஆரம்பம் முதலே குஜராத் அணி அதிரடி காட்டி வந்தது. அகமதாபாத் மைதானமும் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையவே குஜராத் அணி வீரர்கள் அதிரடியில் இறங்கினர். 14 ஒவர் முடிவில் குஜராத் அணி இரண்டு விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களை எடுத்திருந்தது.

 Will Rain affect IPL finals between CSK and Gujarat waht tamilnadu weatherman says

மழை வர வாய்ப்பு?

அதேநேரம் இன்றும் கூட மழை வர வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. டாஸ் வென்ற தோனி கூட மழையைக் கருத்தில் கொண்டே முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறியிருந்தார். இன்று காலை வந்த பெரும்பாலான வானிலை மைய தகவல்களில் போட்டி நடைபெறும் போது மழை வர வாய்ப்பு உள்ளதாகவே கூறப்பட்டிருந்தது. போட்டி நடைபெறும் போது மழை பெய்தால் ஓவர்கள் குறைக்கப்படும். இது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தையே தரும்.

அதற்கேற்ப அகமதாபாத்தின் தெற்கே மழை மேகங்கள் உருவானது. அவை மைதானத்தை நோக்கி வந்து மழை பெய்யுமானால் போட்டி பாதிக்கப்படலாம். நேற்றைய தினமும் கூட இதேபோலத் தான் நடந்தது. இதனால் சிஎஸ்கே மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கவலையடைந்தனர். அதற்கேற்ப மழை வந்தால் மைதானத்தைக் கவர் செய்யவும் அங்குள்ள ஊழியர்கள் தயாராக உள்ளனர். இதற்கிடையே இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

 Will Rain affect IPL finals between CSK and Gujarat waht tamilnadu weatherman says

வெதர்மேன் என்ன சொல்கிறார்:

தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் பிரார்த்தனைகளுக்குப் பலன் கிடைக்கிறது.. அகமதாபாத்திற்கு தெற்கே மழை மேகங்கள் நகர்கிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.

அவர் தனது மற்றொரு ட்வீட்டில், "அகமதாபாத்திற்கு தெற்கே பெரும் மழை மேகங்கள் உருவாகியுள்ளது. இதனால் மைதானத்தில் தூறல் இருக்கும். ஆனால், தற்போதைய சூழலில் இது போட்டியைப் பாதிக்காது" என ட்வீட் செய்துள்ளார்.

இப்போது மழை பெய்வதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்தும் அவர் ட்வீட் செய்துள்ளார். அவர் இப்போது தனது ட்விட்டரில், "அடுத்த 15 நிமிடங்களில், மழை மேகத்தின் தீவிரமான பகுதி மைதானம் மேல் செல்லும் என்பதால் மழை பெய்கிறது. அடுத்த 15-30 நிமிடங்களுக்கு மழை தொடரும்.

 Will Rain affect IPL finals between CSK and Gujarat waht tamilnadu weatherman says

இந்த மழை மேகம் வலுவடைந்து, பின்னர் மீண்டும் வலுவிழந்தது. இப்போது மீண்டும் அது ஸ்டேடியத்தின் மேல் தீவிரமடைந்துள்ளது" என பதிவிட்டுள்ளார். 30 நிமிடங்களில் மழை நின்றுவிட்டால் பெரியளவில் ஓவர்கள் இழப்பு ஏற்படாது என்ற நம்பிக்கையிலேயே ரசிகர்கள் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+