Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் 1,000 ரூபாய் நோட்டு வருதா? “எல்லா சிக்கலையும் தீர்த்தாச்சு”: ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரிசர்வ் வங்கி மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அதுகுறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை வெளியிட்டது மத்திய அரசு. ஆனால், 2000 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றுள்ளது.

Will Rs 1,000 currency notes be back soon? RBI clarifies

தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என வதந்திகள் எழுந்தன. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றுவதற்கான காலம் நீட்டிக்கப்பட்டு தற்போது அதுவும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில், ரூ.1000 பழைய நோட்டுகள் மீண்டும் வரப்போவதாக செய்திகள் பரவின. இதற்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி ரூ.1000 நோட்டை மீண்டும் அறிமுகம் செய்யவோ, புதிய ரூ.1000 நோட்டை வெளியிடவோ திட்டமிடவில்லை எனத் தெரிவித்துள்ளது. இது பற்றி ஆதாரப்பூர்வமாக செய்தி அளித்துள்ள ஏஎன்ஐ, ரிசர்வ் வங்கிக்கு 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, 87 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்றும், இன்னும் ரூ.10 ஆயிரம் கோடி புழக்கத்தில் உள்ளது என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. மேலும், 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தி உள்ளது.

போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்காக, போதுமான அளவு 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, சாத்தியமான பண இருப்பு சிக்கல்களை நிவர்த்தி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டு தட்டுப்பாடு இல்லாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதே சமயம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையால் மக்களின் பணத்தேவை குறைந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது போன்ற போலியான மற்றும் பொய்யான விஷயங்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என மக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+