வேலூர் ரயிலில் பாலியல் தொல்லை + கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரன்.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
டெல்லி: வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை கண்டித்த தேசிய மகளிர் ஆணையம் அதுபற்றிய விரிவான அறிக்கையை எப்ஐஆர் காப்பியுடன் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளில் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த பெண்கள் பணியாற்றி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த பெண் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.

இந்த பெண் திருமணமானவர். தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் நேற்று கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த ரயில் வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அருகே சென்றது. அப்போது அந்த பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது ஒருவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணி என்று கூட பாராமல் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.
அதன்பிறகு அந்த நபர் காட்பாடி நிலையத்தில் இறங்கி தலைமறைவானார். இதற்கிடையே ரயிலில் இருந்து மர்மநபர் கீழே தள்ளியதில் விழுந்த கர்ப்பிணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து ஹேமராஜ் என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு, செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார். அதோடு தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சென்னை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தேசிய மகளிர் ஆணையம் பதிவு செய்துள்ளது. பெண்களுக்கான ரயில் பெட்டியில் பயணித்தபோதும் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்புகிறது.
தேசிய மகளிர் ஆணைய தலைவர் உத்தரவின்படி இதுபற்றி தாமாக முன்வந்து விசாரணை மே்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். பிஎன்எஸ் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விரிவான விசாரணை அறிக்கை எப்ஐஆர் காப்பியுடன் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications