Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிஜ் பூஷண் சரண் சிங்குடன் மல்யுத்த வீராங்கனைகள் சமரசம்? வேகமாக பரவும் தகவல்.. உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் அவருடன் சமரசம் செய்ய சென்றதாக வேகமாக தகவல் பரவியது. இந்நிலையில் தான் இது உண்மையா? இல்லையா? என்பது பற்றிய பரபர தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங் உள்ளார். பாஜக எம்பியான இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டெல்லி போலீசார் பிரிஜ் சரண் சிங் மீது போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்துள்ளன.

Women wrestlers gone to crime scene for investigation, but media flashed gone for a compromise, says Vinesh Phogat

இருப்பினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனால் கைது நடவடிக்கை கோரி தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்பாது அங்கு பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தரதரவென இழுத்து கைது செய்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. டெல்லி மகளிர் ஆணையமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்துவிட்டு, மல்யுத்த வீராங்கனைகள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மகளிர் ஆணையம் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் இன்னும் கைது நடவடிக்கை எடுக்காத டெல்லி போலீசார் மற்றும் மத்திய அரசை எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே தான் 2 நாட்களுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வரும் 15ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக வீரர், வீராங்கனைகள் ஒத்திவைத்துள்ளனர். இதுபற்றி அனுராக் தாகூர் கூறுகையில், ‛‛வரும் 15ம் தேதிக்குள் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்து முடிக்கப்படும். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். வரும் 30ம் தேதிக்குள் இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தல் நடத்தப்படும்'' என்றார். இதற்கிடையே தான் டெல்லி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே தான் இன்று சில மீடியாக்களில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை சந்தித்து மல்யுத்த வீரர், வீராங்னைகள் சமரசம் பேச சென்றதாக தகவல்கள் பரப்பி விடப்பட்டன. இதற்கு மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகத் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதுபற்றி வினீஷ் போகத் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் விமர்சனம் செய்துள்ளார்.

இதுபற்றி அவர் ‛‛பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் பலம் இதுதான். அவர் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி பொய்யான கதைகளை கிளப்பி பெண் மல்யுத்த வீரர்களை துன்புறுத்துகிறார். அவர் கைது செய்யப்பட வேண்டும். எங்களை கலைப்பதற்கு பதில் அவரை போலீசார் கைது செய்தால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண் மல்யுத்த வீராங்கனையை காவல்துறையினர் விசாரணைக்காக குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் உண்மைக்கு புறம்பாக சமரசத்திற்கு சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது'' என சாடியிருந்தார்.

அதேபோல் போராட்டத்தை முன்னெடுத்த மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛அவுட்கோயிங்' இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் தொல்லை குற்றச்சாட்டு பற்றி டெல்லி சிறப்பு விசாரைண குழுவினர் விசாரித்து வுருகின்றன்ர. அவர் மீதான 2 வழக்குகளில் போலீசார் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் அறிக்கை (குற்றப்பத்திரிகை) தாக்கல் செய்ய உள்ளனர்' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் தாங்கள் சமரசம் செய்ய முயன்ற விஷயத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

முன்னதாக பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் மல்யுத்த வீராங்கனையை இன்று டெல்லி போலீசார் அவரது அலுவலக இல்லத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது பெண் போலீசார் உடன் சென்றனர். சம்பவ நாளில் நடந்தது என்ன? என்பது பற்றி போலீசாரிடம் அந்த வீராங்னை நடித்து காட்டினார். இதன்மூலம் முக்கிய தகவல்களை டெல்லி போலீசார் பெற்றனர். இதற்காக மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷண் சரண் சிங் வீட்டுக்கு சென்ற நிலையில் தான் சமரசம் செய்ய சென்றதாக தகவல்கள் பரப்பி விடப்பட்டன.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் அலுவலக இல்லத்தில் 30 நிமிடம் ஆய்வு நடந்தது. அப்போது சம்பவம் நடந்தது எப்படி என்பது பற்றி பாதிக்கப்பட்ட பெண் நடித்து காண்பித்தார். இது வழக்கமான நடைமுறை தான்'' என்றார். இதன்மூலம் பிரிஜ் பூஷண் சரண் சிங் வழக்கு முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+