ஸ்டெர்லைட்டை திறக்க ஒருபோதும் அனுமதி கிடையாது.. தமிழக அரசு ஒரே போடு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: பராமரிப்பு பணி உள்ளிட்ட எந்த பணிகளுக்காகவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடும் எதிர்ப்பிற்கு இடையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. இதில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடுமையான வாதங்களை வைத்தது.

கோரிக்கை
இன்று நடந்த விசாரணையில் பராமரிப்பு பணிக்காக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் கோரிக்கை வைத்தது. ஸ்டெர்லைட் ஆலை பல மாதங்களாக திறக்கப்படவில்லை. இதனால் நிறைய பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும், அதனால் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

கொள்கை முடிவு
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. இந்த ஆலை காற்று மாசை ஏற்படுத்துகிறது. சுற்றுசூழலுக்கு இந்த ஆலை கேடு விளைவிக்கிறது. அதனால் இதை இயங்க அனுமதிக்க முடியாது.

முடியாது
இதில் தமிழக அரசின் கொள்கை முடிவு. இதற்கு முன் தமிழக அரசு வைத்த பதில் மனு மற்றும் கோரிக்கைகளில் இதை தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறோம். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கவே முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

உத்தரவு
தமிழக அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது. பராமரிப்பு பணிக்காகவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
-
பாடம் கற்காத மத்திய அரசு.. நீட் லீக் விவகாரத்தில் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்.. பின்னணி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications