WFH கட்டுப்பாட்டை நீக்கிய அரசு.. வீட்டிலிருந்து வேலை பார்ப்பது நிரந்தரமாகிறதா? ஐடி துறை வரவேற்பு
டெல்லி: வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வு கொண்டு வந்துள்ளது. இதற்கு தகவல் தொழில்நுட்பத்துறை பாராட்டுகளை தெரிவித்து உள்ளது.
கொரோனா நோய் பரவல் காரணமாக பல்வேறு நிறுவனங்களும், வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான ஒர்க் பிரம் ஹோம் வசதியை ஊழியர்களுக்கு கொடுத்தன.
ஆனால் இதில் நிறுவனங்களுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. நிலையான ஐபிகளுக்கான வங்கி கேரண்டி, தகவல் பதிவு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் நிறுவனங்களுக்கு உள்ளன. ஆனால் இவை நீக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருந்தார்.

பிரதமர் தகவல்
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்தியாவை தொழில் துவங்குவதற்கு ஏற்ற நாடாக மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தகவல் தொடர்புத் துறையின் பிற சேவை வழங்கும் விதிமுறைகள் எளிதாக்கப் பட்டுள்ளன. இந்தியாவின் ஐடி துறை நமது பெருமிதம் ஆகும். ஐடி துறையின் பங்களிப்பு உலக நாடுகளால் பாராட்டப்படுகிறது. எனவே இந்தத் துறை சுமுகமாக வளர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

அனுமதிகள் நீக்கம்
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதுபற்றி கூறுகையில், வீட்டில் இருந்து பணி செய்வதற்கு தேவைப்படும் பல்வேறு அனுமதிகள் மற்றும் செயல் முறைகளை அரசு நீக்கிவிட்டது. எனவே வீட்டில் இருந்து வேலை பார்ப்பது அல்லது எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பார்ப்பது இனிமேல் எளிதாகி விடும் என்று தெரிவித்திருந்தார்.

நிறுவனங்களுக்கு வசதி
மத்திய அரசின் இந்த விதிமுறை தளர்வு காரணமாக, வீட்டில் இருந்து பணியாற்றுவது, கொரோனா நோய் பரவல் முடிந்ததற்கு பிறகும் பல நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அலுவலக செலவினம் உள்ளிட்டவை குறையும், வாகனப் போக்குவரத்து மற்றும் அவற்றுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றில் உள்ள சிரமங்கள் குறையும் என்பதால் ஐடி நிறுவனங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தனது ஊழியர்கள் வேலை பார்க்கலாம் என்ற விதிமுறையை நிரந்தரமாக கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் இந்த துறை வல்லுனர்கள். அதேநேரம் ஊழியர்களுக்கு இது உடல் மற்றும் மனரீதியான அழுத்தத்தை கொடுக்கும் என்பது மருத்துவர்கள் பார்வையாக இருக்கிறது. குழு மனப்பான்மை கூண்டோடு காலியாகிவிடும் என்ற அச்சமும் உள்ளது.

விப்ரோ வரவேற்பு
விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி இதுபற்றி கூறுகையில், இது உண்மையிலேயே நீண்ட காலத்திற்கு பயனளிக்கக் கூடிய ஒரு முற்போக்கான சிந்தனையாகும். தொழில்நுட்பத் துறையை போட்டியில் இருக்கச் செய்யும் நடவடிக்கை இதுவாகும். எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என்பது இப்போது யதார்த்தம் ஆகிவிட்டது என்று தெரிவித்தார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications