உலக அளவில் 5 கோடி பேரை தாண்டியது கொரோனா பாதிப்பு.. இந்தியாவில் ஒரே நாளில் 451 பேர் தொற்றுக்கு பலி
உலக அளவில் தொற்றுக்கு 51,227,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
டெல்லி: உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,227,964 ஆக உயர்ந்துள்ளது.. உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவரை 1,268,881 ஆகும்.
நாளுக்கு நாள் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்தபடியே வருகிறது.. அதற்கேற்றார்போல் டிஸ்சார்ஜ்களும் அதிகரித்து காணப்படுகிறது.
தற்போது உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,227,964 ஆக உயர்ந்துள்ளது.. இதுவரை கொரோனா மரணங்கள் உலக அளவில் 1,268,881 ஆகும்.. உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 36,031,920 ஆக உயர்ந்துள்ள நிலையில், 13,927,163 பேர் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் இதுவரை 10,416,619 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. ரஷ்யாவில் இதுவரை 1,796,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. பிரேசிலில் ஒரேநாளில் 11,651 பேருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளது.. இதுவரை அங்கு கொரோனா தொற்றுக்கு 5,675,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 85 லட்சத்தை தாண்டி உள்ளது.. புதிதாக 37,211 பேருக்கு இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85 லட்சத்து 91 ஆயிரத்து 075 ஆக உயர்ந்துள்ளது.
உக்ரைன் அதிபருக்கு கொரோனா.. தனிமையிலிருந்து பணிகளை மேற்கொள்கிறார்
இந்தியாவில் ஒரே நாளில் 451 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.. அதன்படி நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது.. 79 லட்சத்து 57 ஆயிரத்து 206 பேர் தொற்றில் இருந்து இதுவரையில் குணமாகி உள்ளனர்.