ஜனாதிபதி தேர்தல்! எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக களமிறங்கும் யஷ்வந்த் சின்கா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: குடியரசு யஷ்வந்த் சின்கா தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவராக இப்போது ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய வரும் ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக
இந்தத் தேர்தலில் வெல்ல பாஜகவுக்கு இன்னும் கொஞ்ச வாக்குகள் மட்டுமே தேவை என்ற நிலையே உள்ளது. ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை நடத்த மற்ற கட்சிகளிடம் பேச ராஜ்நாத் சிங் மற்றும் ஜேபி நட்டா ஆகியோரை கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.

எதிர்க்கட்சிகள்
பாஜகவுக்கு போட்டி அளிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பொதுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் ஆலோசனையில் இறங்கின. இதற்காக முதலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் சரத் பவார் பெயர் அடிப்பட்டது.

குழப்பம்
இருப்பினும், சரத் பவார் அதை மறுத்துவிட்டார். இதையடுத்து தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இருப்பினும், அவர்கள் இருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துவிட்டனர். இதனால் இதனால் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்தது.

யஷ்வந்த் சின்கா
இந்தச் சூழலில் இன்று டெல்லியில் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரைத் தேர்வு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற கட்சிகள்
முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வசதியாக யஷ்வந்த் சின்கா திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. மம்தா பானர்ஜி கடிதம் எழுதிய சமயத்தில் ஆம் ஆத்மி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளரைப் பொறுத்து எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படுமா என முடிவு செய்யப்படும் என கூறி இருந்தன. இப்போது யஷ்வந்த் சின்கா போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சிகள் விரைவில் தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications