உங்க குடும்பமே நாசமா போகும்.. போலீசுக்கு நடுரோட்டில் உருண்டபடி சாபமிட்ட சாமியார்..ஷாக்
தர்மபுரி: ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் செல்ல சாமியார் ஒருவருக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இதனால் அந்த சாமியார் - நடுரோட்டில் உருண்டு பொறண்டு, போலிசாரின் குடும்பத்திற்கே சாபம் விட்டார்.
Recommended Video
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், படகு சவாரி மேற்கொள்ளவும், சுவைமிகுந்த மீன் உணவுகளை ருசித்து சாப்பிடுவதற்கு தமிழகம் மட்டுமல்லாது .
அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம், அதிலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

சுற்றுலா பயணிகள்
கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஊரடங்கு தளர்வு
தற்பொழுது ஊரடங்கு தளர்வு படிப்படியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒகேனக்கல் சுற்றுலா தளம் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால் சுற்றுலா தளம் இன்னும் திறக்கப்படாமலே உள்ளது.

போலீசார் தடுப்பு
இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளை பென்னாகரம் அடுத்த மடம் பகுதியில் உள்ள வாகன சோதனை சாவடியில் நிறுத்தி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார், சுற்றுலா தளம் செல்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சொல்லி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கோரிக்கை
ஒரு சிலர் தங்களுக்கு ஒகேனக்கல் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் தினசரி நடந்தேறி வருகின்றது.

திருப்பி அனுப்பி வைத்தனர்
வழக்கம்போல காவல் துறையினர் மடம் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய காரில் வந்த சாமியாரை தடுத்து நிறுத்தி அனுமதி இல்லை என்று திருப்பி அனுப்ப முயற்சித்தனர்

வீடியோ வைரல்
ஆத்திரமடைந்த சாமியார், தான் கோவிலுக்கு வந்ததாகவும், அனுமதியில்லாததால் நடுரோட்டிலேயே உருண்டு பெறண்டு, பின்பு அனுமதியளிக்காத போலிசாரின் குடும்பம் இன்னும் 6 மாதத்தில் நாசமாக போய்விடும் என்று சாபம் விட்டு சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைகளில் வைரலாகி வருகிறது.
-
IPS Transfer: உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்.. 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications