Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிறுத்துங்க..’இதை’ செய்யாத பாஜகவுடன் எதற்கு கூட்டணி..! ஷாக் ஆன செளமியா.. பதறிப் போன பாமக தலைகள்!

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த, பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியிடம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜகவிடம் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று கேள்வி கேட்ட இளைஞரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடி பிடித்து வரும் நிலையில், வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒரு நாளே கால அவகாசம் இருக்கும் நிலையில் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

A young asked to PMK candidate Sowmiya Anbumani why did she form alliance with BJP

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சௌமியா தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

சௌமியா அன்புமணி : காவிரி- தர்மபுரி உபரி நீர் திட்டம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, விவசாயிகள் முன்னேற்றத்திற்கான திட்டம் மற்றும் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதி உள்ளிட்ட பாமகவின் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்பொழுது அ.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கோபாலபுரம், மருக்காலம்பட்டி, பூதநத்தம், மெணசி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்பொழுது பெண்கள் சௌமியாவிற்கு ஆரத்தி எடுத்து, பூ தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாக்குறுதி: அப்போது பேசிய அவர்,"தருமபுரியில் விளையும் மா, புளி, தக்காளி, மரவள்ளி, கரும்பு ஆகியவற்றை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் வசதியாக, தருமபுரியில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தவும் சிறப்பு மண்டலம் அமைக்கப்படும், பட்டுப்புழு வளர்ப்பு மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இளைஞரால் பரபரப்பு: பா.ம.க.வின் முயற்சியால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.7840 கோடியில் செயல்படுத்தப்படுவதற்கு முழுமூச்சாக செயல்படுவேன். மேலும் பெண்களின் வேலைவாய்ப்புக்காக ஆயத்த ஆடை பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்." என பேசி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த சௌமியா, பெண்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென வந்த இளைஞர் ஒருவர் சௌமியாவிடம் பேசினார்.

பாஜகவுடன் கூட்டணி ஏன்?: அப்பொழுது 10.5 இட ஒதுக்கீடு கேட்டோம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கேட்டோம். ஆனால் அதை மத்திய அரசோ, பாஜகவோ செய்யவில்லை. ஆனால் பாஜகவோடு எதற்கு கூட்டணி சேர்ந்தீர்கள். என கேள்வி கேட்டார். அப்பொழுது சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாமக வேட்பாளர் சௌமியா, இளைஞரை சமாதானப்படுத்த, இட ஒதுக்கீடு கொடுக்காததால் தான், நாம் அவர்களோடு சேரவில்லை என தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த இளைஞரை அழைத்து சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+