நிறுத்துங்க..’இதை’ செய்யாத பாஜகவுடன் எதற்கு கூட்டணி..! ஷாக் ஆன செளமியா.. பதறிப் போன பாமக தலைகள்!
தருமபுரி: தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த, பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியிடம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜகவிடம் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று கேள்வி கேட்ட இளைஞரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடி பிடித்து வரும் நிலையில், வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒரு நாளே கால அவகாசம் இருக்கும் நிலையில் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சௌமியா தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.
சௌமியா அன்புமணி : காவிரி- தர்மபுரி உபரி நீர் திட்டம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, விவசாயிகள் முன்னேற்றத்திற்கான திட்டம் மற்றும் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதி உள்ளிட்ட பாமகவின் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்பொழுது அ.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கோபாலபுரம், மருக்காலம்பட்டி, பூதநத்தம், மெணசி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்பொழுது பெண்கள் சௌமியாவிற்கு ஆரத்தி எடுத்து, பூ தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாக்குறுதி: அப்போது பேசிய அவர்,"தருமபுரியில் விளையும் மா, புளி, தக்காளி, மரவள்ளி, கரும்பு ஆகியவற்றை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் வசதியாக, தருமபுரியில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தவும் சிறப்பு மண்டலம் அமைக்கப்படும், பட்டுப்புழு வளர்ப்பு மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
இளைஞரால் பரபரப்பு: பா.ம.க.வின் முயற்சியால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.7840 கோடியில் செயல்படுத்தப்படுவதற்கு முழுமூச்சாக செயல்படுவேன். மேலும் பெண்களின் வேலைவாய்ப்புக்காக ஆயத்த ஆடை பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்." என பேசி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த சௌமியா, பெண்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென வந்த இளைஞர் ஒருவர் சௌமியாவிடம் பேசினார்.
பாஜகவுடன் கூட்டணி ஏன்?: அப்பொழுது 10.5 இட ஒதுக்கீடு கேட்டோம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கேட்டோம். ஆனால் அதை மத்திய அரசோ, பாஜகவோ செய்யவில்லை. ஆனால் பாஜகவோடு எதற்கு கூட்டணி சேர்ந்தீர்கள். என கேள்வி கேட்டார். அப்பொழுது சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாமக வேட்பாளர் சௌமியா, இளைஞரை சமாதானப்படுத்த, இட ஒதுக்கீடு கொடுக்காததால் தான், நாம் அவர்களோடு சேரவில்லை என தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த இளைஞரை அழைத்து சென்றனர்.
-
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications