Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக மாஜி கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு.. இன்று 11 பேர் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு தருமபுரி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டசபை உறுப்பினர் கே.பி. அன்பழகன். இவர் கடந்த அதிமுக ஆட்சியின் போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார். 2016ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

Dharmapuri Court to hear about case agaisnt Former minister K.B.Anbalagan

இந்த வழக்கு தொடர்பாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 58 இடங்களில் ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இதில் நடந்த தொடர் விசாரணையில் ரூ 45.20 கோடிக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா(56), மகன்கள் சசிமோகன்(30), சந்திரமோகன்(33), உறவினர்கள் ரவிசங்கர்(45), சரவணன்(47), சரவணக்குமார்(41), மாணிக்கம்(62), மாணிக்கம் மனைவி மல்லிகா(56), தனபால்(45), சரஸ்வதி பச்சியப்பன் எஜூகேசன் அறக்கட்டளை நிர்வாகி ஆகிய 11 பேர் மீது, தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த மே 22ம் தேதி, 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, தர்மபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.

அப்போது ஜூலை 13 ஆம் தேதி வழக்கு விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் விசாரணை தொடங்க இருந்த நிலையில் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் மூலம் சம்மன் விநியோகம் செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்மந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6ம் தேதி தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

அப்போது, வழக்கு வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள் ரவிசங்கர், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், மாணிக்கம் மனைவி மல்லிகா, தனபால் உள்ளிட்ட 11 பேர் இன்று ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மணிமொழி வருகின்ற 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+