தருமபுரியே அசந்து போச்சு.. புதுமாப்பிள்ளை ராஜா செய்த காரியத்தை பாருங்க.. பூரித்து போன அந்த விஐபி
ஆதரவற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார் ஒரு இளைஞர்
தருமபுரி: புதுமாப்பிள்ளை ராஜா செய்த காரியத்தை பார்த்து, தருமபுரி மாவட்டமே பூரித்து போயுள்ளது.. வீரப்பனின் மகளே நேரில் சென்று பாராட்டி இருக்கிறார் என்றார் பார்த்து கொள்ளுங்களேன்..!
சமீபகாலமாகவே இளைஞர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்.. மனிதநேயத்தை பல விதங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.. குறிப்பாக தங்கள் திருமணங்களில் இத்தகைய நற்காரியங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Recommended Video
கடந்த மாதம் மயிலாடுதுறையில் ஒரு திருமணம் நடந்தது.. அவர் பெயர் புருஷோத்தமன்.. வயது 30 ஆகிறது.. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

புவனேஸ்வரி
இவருக்கு புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயமானது.. புருஷோத்தமனை பொறுத்தவரை இந்துவாக இருந்தாலும், சின்ன வயசிலிருந்தே இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூக மக்களுடன் இணைந்து பழகி வந்துள்ளார்.. எல்லா மதமும் சம்மதம் என்ற ரீதியிலேயே இவருடைய கொள்கையும், வாழ்க்கையும் இருந்துள்ளது.. அனைத்து தரப்பு சமுதாயத்திடமும் இவருக்கு நண்பர்களும் உண்டு.. அவர்களின் மதங்கள் புருஷோத்தமனை பெரிதளவு ஈர்த்தும் வந்துள்ளது..

புருஷோத்தமன்
அதனால், தன்னுடையதிருமணத்தை 3 மத முறைப்படி நடத்த வேண்டும் ஆசைப்பட்டார்.. அதன்படியே இருவீட்டின் சம்மதப்படி, முதல் நாள் கிறிஸ்துவ முறைப்படி மற்றும் இஸ்லாமிய முறைப்படி, 2-ம்நாள் இந்து முறைப்படியும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த 3 திருமணத்திற்காகவே 3 விதமான திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன.. உறவினர்கள், நண்பர்களுக்கும் 3 பத்திரிகைகளையுமே தந்தார் புருஷோத்தமன்.. ஒரே பெண்ணுக்கு மும்மதமுறைப்படி திருமணம் செய்தார் புருஷோத்தமன்.. 3 விதமான மதத்தினரும் புருஷோத்தமனை வாழ்த்திவிட்டு சென்றனர்.

ராஜா மாப்பிள்ளை
அதேபோல தருமபுரி மாவட்டத்திலும் இப்போது ஒரு திருமணம் நடந்துள்ளது.. இந்த மாப்பிள்ளையும் வித்தியாசமான முறையில் தன் திருமணத்தை செய்துள்ளார்.. பாப்பாரப்பட்டியை சேர்ந்த இந்த மாப்பிள்ளை பெயர் ராஜா.. அனுசுயா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.. இந்த திருமணத்தில் உறவினர்களைவிட, ஆதரவற்ற குழந்தைகளும்,முதியவர்களும், பெரியவர்களும். காதுகேளாத குழந்தைகளும்,மாற்று திறனாளிகளும்தான் அதிகளவில் இருந்தனராம்.. அதேபோல் நலிவடைந்த தெருக்கூத்து கலைஞர்களும் அதிகமாக இருந்தனர்...

ஆதரவற்றவர்கள்
இவர்கள் அத்தனை பேரையும், வேன்களை ஏற்பாடு செய்து, மண்டபத்திற்கு அழைத்து வந்துள்ளார்.. அங்கு அவர்களுக்கு உணவளித்து, அவர்களுக்கு புதிய ஆடைகள் கொடுத்து மகிழ்ந்தார்... அதே போல் ஆதரவற்றவர்களுடன் சேர்ந்து புதுமணத்தம்பதிகள் போட்டோவும் எடுத்துக்கொண்டனர்... ஆதரவற்றவர்களை அழைத்து திருமணத்தில் கலந்துகொள்ள செய்தது அந்த பகுதியில் பரபரப்பாக ஆச்சரியமாகவும் பேசப்பட்டது..

ஆச்சரிய திருமணம்
திருமணத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாராட்டி சென்றனர். இந்த நிகழ்வில் சந்தனகடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமியும் கலந்து கொண்டு, ராஜாவின் செயலால் ஆச்சரியப்பட்டுள்ளார்.. இந்த திருமணம் குறித்து மாப்பிள்ளை ராஜா சொல்லும்போது, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதவரற்ற முதியவர்கள் ஆசிரமங்களிலியே உணவளித்து வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர்... அவர்களும் இது போன்ற திருமண விழாக்களுக்கு அழைத்து உணவளிப்பதால் அவர்கள் சுதந்திரமாக இருப்பார்கள் என்கிறார்..

மனமாற்றம்
உண்மைதான் இதன்மூலம் இந்த வயதானவர்களுக்கு ஒரு மாறுதலும், மனமாற்றமும் நிச்சயம் ஏற்பட செய்யும்.. அதுமட்டுமல்ல, திருமணம் என்றலே சொந்தக்காரர்கள்தான் ஆக்கிரமித்து நிறைந்து இருப்பார்கள்.. இது நமக்கு பல வகைகளில் சந்தோஷம் தரக்கூடியதுதான் என்றாலும், சில சமயம், எவ்வளவுதான் பார்த்து பார்த்து கவனித்தாலும் ஏதாவது ஒரு குறையை சொல்லிவிட்டு சொந்தங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. இத்தகையவர்களை காட்டிலும், ராஜா நடத்திக் காட்டிய இந்த திருமணம், ஆயிரம் மடங்கு உன்னதமானது என்றே சொல்லலாம்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications