ஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்... தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம்
Recommended Video

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TET தேர்ச்சி முன்னுரிமை அடிப்படையில் 950 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு உத்தரவிற்கு பிறகு முதன்மை கல்வி அலுவலகம் தற்காலிக பணி ஆணை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப பள்ளிக்கல்வி இயக்குனர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையே, தேர்வு காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் தங்களது போராட்டத்தை கல்வியாண்டு முடியும் வரை தள்ளிவைக்க முடியுமா? என்பது குறித்து இன்று மதியம் ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரம், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதி கிருபாகரன், இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications