கிருஷ்ணகிரி அருகே பீதி.. கிராமங்களுக்குள் புகுந்த யானை.. பசு மாடுகள் ஆடு பலி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கிருஷ்ணகிரி அருகே பீதி.. கிராமங்களுக்குள் புகுந்த யானை
தருமபுரி: ஒற்றை காட்டு யானை தாக்கியதில் இரண்டு பசுமாடுகள், ஒரு ஆடு கொல்லப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த சின்ன பூதுக்கோட்டை கிராமப் பகுதியில் நுழைந்த ஒற்றை காட்டுயானை, நாராயணப்பா என்பவரது பசுமாட்டை மிதித்து அப்பைய்யா என்பவரது ஆட்டையும் தூக்கி வீசியது. பின் சில நிமிடங்களிலியே அருகே உள்ள கிராமத்தில் கிருஷ்ணன் என்பவரது பசுமாட்டையும் பலமாக தாக்கியது.

ஒற்றை காட்டுயானை தாக்கியதில் இரண்டு பசுமாடுகள் மற்றும் ஒரு ஆடு பரிதாபமாக உயிரிழந்தன. யானையை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications