ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் தம்பதியை கட்டி போட்டு 280 பவுன் நகை கொள்ளை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் தம்பதியை கட்டி போட்டு 280 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை நடத்தி வரும் பிரபல மருத்துவர் சக்திவேல் (52) . இவர் நாகனம்பட்டி புறவழிச் சாலையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் மருத்துவர் சக்திவேல் அவருடைய மனைவி ராணி, சக்திவேலின் தகப்பனார் சென்னியப்பன் மற்றும் தாயார் தேவநாயகம் உள்ளிட்ட நான்கு நபர்களை கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

கட்டிப்போட்டு மேற்படி வீட்டிலிருந்த 280 பவுன் தங்க நகைகளையும் ரூ 25 லட்சம் ரொக்கத்தையும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். தம்பதியை கட்டி போட்டுவிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications