அலறிய அம்மாசி.. மண்வெட்டியால் மண்டயை பிளந்த முரளி.. கொஞ்சநேரத்தில் போர்க்களமான டீக்கடை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 150 ரூபாய் பாக்கியை திருப்பி கேட்டதால் டீக்கடை கொஞ்ச நேரத்தில் போர்க்களமாக மாறியது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டியில் முரளி என்பவர் பல ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார்.

இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அம்மாசி என்பவர் டீ குடிக்க சென்றுள்ளார்.

மண்டை உடைப்பு

மண்டை உடைப்பு

அப்போது டீக்கடையில் முரளியின் மனைவி சண்முகவேல் இருந்துள்ளார். டீ கேட்ட அம்மாசியிடம் பழைய பாக்கி 150 ரூபாயை கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பலத்த காயம்

பலத்த காயம்

அப்போது அங்கு வந்த சண்முகவேலின் கணவர் முரளி ஆத்திரத்தில் அருகிலிருந்த மண்வெட்டியின் கைப்பிடியால் அம்மாசியை கடுமையாக தாக்கியுள்ளார் இதில் அம்மாசியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அதையும் பொருட்படுத்தாத அம்மாசி முரளியுடன் கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது

வடமதுரை

வடமதுரை

இதைப் பார்த்த அருகில் இருந்த சிலர் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

150 ரூபாய் பாக்கி

150 ரூபாய் பாக்கி

புகாரின் அடிப்படையில் முரளி சண்முகவேல் அம்மாசி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 150 ரூபாய் கடனுக்காக டீக்கடை முன்பு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+