திண்டுக்கல்லில் காரில் வந்த இளைஞர்.. கழுத்துக்கு கீழ் தான் பார்வையே.. செல்போனில் ஏராளமான வீடியோக்கள்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் கட்டிட வேலைக்கு செல்லும் பெண்களை, கூலி வேலை தருவதாக காரில் அழைத்துச் சென்று நகை பறித்த கேரள இளைஞரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த சஜூ என்ற அந்த இளைஞரின் செல்போனில் பெண்களின் ஏராளமான வீடியோக்கள் இருந்ததால் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறார். அவர் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.

திண்டுக்கல் நகரில் கட்டிட வேலைக்கு செல்வதற்காக ஆண், பெண் தொழிலாளர்கள் பலர் இருக்கிறார்கள். கட்டுமான தொழிலாளர்கள் தினமும் காலை நாகல்நகர், காட்டாஸ்பத்திரி ஆகிய பகுதிகளில் கூடுவது வழக்கம். பின்னர் அங்கிருந்து தான் கட்டிட வேலைக்கு செல்வது வழக்கம் ஆகும். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகல்நகரில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நின்றுள்ளனர்.

a Kerala youth was arrested for allegedly taking women for work and stealing their gold In Dindigul

அப்போது ஒரு இளைஞர் காரில் அங்கு வந்து, கட்டிட வேலை தருவதாக கூறி ஒரு பெண்ணை அழைத்து சென்றார். திண்டுக்கல் நகருக்கு வெளியே சென்றதும் திடீரென காரை நிறுத்தினார். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி அவர் அணிந்து இருந்த கம்மலை பறித்து கொண்டு, பெண்ணை காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதுபற்றி திண்டுக்கல் நகர டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்கள். அதில் நகை பறிப்பில் ஈடுபட்டவர், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த 28 வயதாகும் சஜூ என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தமிழகம், கேரள மாநிலங்களில் பல பகுதிகளில் கூலி வேலை தருவதாக பெண்களை காரில் அழைத்து சென்று நகை பறித்ததை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த செல்போன்களில் பல பெண்களுடன் அந்தரங்கமாக இருப்பது போலும், அத்துமீறுவது போலுவும் வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பெண்களிடம் நகை பறிப்பு மட்டுமின்றி அத்துமீறலும் நடந்ததா என்ற சந்தேகம் போலீசார் சந்தேகத்தில் உள்ளனர். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+