"அழிவின் டாக்டர்".. வார்னிங் தந்த மாதிரியே நடக்குதே! உலக அளவில் அதிகரித்த வேலையிழப்புகள்.. அதிர்ச்சி
டெல்லி: முன்னணி பொருளாதார நிபுணரும், ஹார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவருமான நோரியல் ரொபிணி எச்சரித்தது போலவே சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை தொடங்கி உள்ளது.
கொரோனா காரணமாக ஏற்பட்ட மந்தநிலை காரணமாகவும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாகவும் உலக அளவில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் பெருநிறுவனங்கள் பல தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகின்றன.
இந்தியாவிலும் சமீபத்தில் பைஜூஸ் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது.

பொருளாதார மந்த நிலை
பைஜூஸ் நிறுவனம் சமீபத்தில் 2500 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. பொருளாதார தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காகவும், ஒரே பணியை பல ஊழியர்கள் செய்வதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அந்த நிறுவனம் கூறியது. மொத்தம் 5 சதவிகித ஊழியர்களை அந்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது. அதேபோல் அன் அகாடமி நிறுவனம் 350 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்து உள்ளது.

பைஜூஸ்
இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் இந்த லே ஆப் தீவிரம் அடைந்து உள்ளது. சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தில் பொருளாதார தட்டுப்பாட்டை சமாளிக்க எலான் மஸ்க் 3500 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கினார். இந்தியாவில் வேலை பார்த்த 99 சதவிகித ஊழியர்கள் மொத்தமாக பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அமெரிக்காவில் கடந்த மாதம் மட்டும் 33849 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அதாவது வேலையில் இருந்து நீக்கப்படும் நபர்களின் சதவிகிதம் 13% அதிகரித்து உள்ளது.

லே ஆப் தீவிரம்
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும் 11 ஆயிரம் பேர் நீக்கப்பட உள்ளனர். Morgan Stanley, Intel, Microsoft (1000 பேர்) போன்ற நிறுவனங்களில் இருந்தும் ஊழியர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். ஜான்சனன் ஜான்சன், வார்னர் ப்ரோஸ், பிலிப்ஸ் ஆகிய பெரு நிறுவனங்களில் இருந்தும் ஊழியர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சமீபத்தில்தான் முன்னணி பொருளாதார நிபுணரும், ஹார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவருமான நோரியல் ரொபிணி உலகில் பல நாடுகளில் மிக மோசமான மந்தநிலை இந்த வருட இறுதியில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

மெட்டா
இதனால் வேலைவாய்ப்பு இழப்பு, பண வீக்கம் அதிகரிக்கலாம் என்று அவர் கணித்து இருந்தார். அமெரிக்காவை சேர்ந்த நோரியல் ரொபிணி இதற்கு முன்பே 2008ல் உலகம் முழுக்க பல நாடுகளை புரட்டி போட்ட மந்தநிலை குறித்து துல்லியமாக கணித்து இருந்தார். இதனால் இவரை அழிவின் டாக்டர் என்று பொருளாதார உலகில் அழைப்பார்கள். இந்த நிலையில்தான் இந்த வருடம் இறுதியில் மந்த நிலை தொடங்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

வேலை இழப்பு
இந்த மந்தநிலை மிக மோசமான நிலையை அடையும். அடுத்த வருடம் முழுக்க அமெரிக்காவிலும், உலகில் பெரும்பாலான நாடுகளிலும் மந்த நிலையில் நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். 1970ல் ஏற்பட்ட மந்த நிலை போலவே இந்த முறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது மோசமாகவும்.. நீண்டதாகவும்.. அருவறுப்பானதாகவும் இருக்க போகிறது என்று அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். முக்கியமாக அமெரிக்காவை சேர்ந்த S&P 500 பங்கு சந்தை 30 சதவிகிதம் சரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீனா
சீனாவில் உள்ள ஜீரோ கோவிட் விதி, ரஷ்யா - உக்ரைன் மோதல் போன்றவை காரணமாக பொருளாதாரம் உலகம் முழுக்க மேலும் பாதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது என்பது கண்டிப்பாக இயலாத காரியமாக மாறும். வரும் மாதங்களில் பண வீக்கம் அதிகரிக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் பண வீக்கம் காரணமாக கண்டிப்பாக விலை ஏற்றம் இருக்கும். பலருக்கு இதனால் வேலை போகும். நிலைமை மிக மோசமாகும் என்று எச்சரிக்கை விடுத்தார் . அவர் எச்சரிக்கை விடுத்தது போலவே சர்வதேச அளவில் வேலையிழப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications