"அழிவின் டாக்டர்".. வார்னிங் தந்த மாதிரியே நடக்குதே! உலக அளவில் அதிகரித்த வேலையிழப்புகள்.. அதிர்ச்சி
டெல்லி: முன்னணி பொருளாதார நிபுணரும், ஹார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவருமான நோரியல் ரொபிணி எச்சரித்தது போலவே சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை தொடங்கி உள்ளது.
கொரோனா காரணமாக ஏற்பட்ட மந்தநிலை காரணமாகவும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாகவும் உலக அளவில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் பெருநிறுவனங்கள் பல தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகின்றன.
இந்தியாவிலும் சமீபத்தில் பைஜூஸ் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது.

பொருளாதார மந்த நிலை
பைஜூஸ் நிறுவனம் சமீபத்தில் 2500 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. பொருளாதார தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காகவும், ஒரே பணியை பல ஊழியர்கள் செய்வதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அந்த நிறுவனம் கூறியது. மொத்தம் 5 சதவிகித ஊழியர்களை அந்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது. அதேபோல் அன் அகாடமி நிறுவனம் 350 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்து உள்ளது.

பைஜூஸ்
இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் இந்த லே ஆப் தீவிரம் அடைந்து உள்ளது. சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தில் பொருளாதார தட்டுப்பாட்டை சமாளிக்க எலான் மஸ்க் 3500 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கினார். இந்தியாவில் வேலை பார்த்த 99 சதவிகித ஊழியர்கள் மொத்தமாக பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அமெரிக்காவில் கடந்த மாதம் மட்டும் 33849 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அதாவது வேலையில் இருந்து நீக்கப்படும் நபர்களின் சதவிகிதம் 13% அதிகரித்து உள்ளது.

லே ஆப் தீவிரம்
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும் 11 ஆயிரம் பேர் நீக்கப்பட உள்ளனர். Morgan Stanley, Intel, Microsoft (1000 பேர்) போன்ற நிறுவனங்களில் இருந்தும் ஊழியர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். ஜான்சனன் ஜான்சன், வார்னர் ப்ரோஸ், பிலிப்ஸ் ஆகிய பெரு நிறுவனங்களில் இருந்தும் ஊழியர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சமீபத்தில்தான் முன்னணி பொருளாதார நிபுணரும், ஹார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவருமான நோரியல் ரொபிணி உலகில் பல நாடுகளில் மிக மோசமான மந்தநிலை இந்த வருட இறுதியில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

மெட்டா
இதனால் வேலைவாய்ப்பு இழப்பு, பண வீக்கம் அதிகரிக்கலாம் என்று அவர் கணித்து இருந்தார். அமெரிக்காவை சேர்ந்த நோரியல் ரொபிணி இதற்கு முன்பே 2008ல் உலகம் முழுக்க பல நாடுகளை புரட்டி போட்ட மந்தநிலை குறித்து துல்லியமாக கணித்து இருந்தார். இதனால் இவரை அழிவின் டாக்டர் என்று பொருளாதார உலகில் அழைப்பார்கள். இந்த நிலையில்தான் இந்த வருடம் இறுதியில் மந்த நிலை தொடங்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

வேலை இழப்பு
இந்த மந்தநிலை மிக மோசமான நிலையை அடையும். அடுத்த வருடம் முழுக்க அமெரிக்காவிலும், உலகில் பெரும்பாலான நாடுகளிலும் மந்த நிலையில் நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். 1970ல் ஏற்பட்ட மந்த நிலை போலவே இந்த முறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது மோசமாகவும்.. நீண்டதாகவும்.. அருவறுப்பானதாகவும் இருக்க போகிறது என்று அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். முக்கியமாக அமெரிக்காவை சேர்ந்த S&P 500 பங்கு சந்தை 30 சதவிகிதம் சரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீனா
சீனாவில் உள்ள ஜீரோ கோவிட் விதி, ரஷ்யா - உக்ரைன் மோதல் போன்றவை காரணமாக பொருளாதாரம் உலகம் முழுக்க மேலும் பாதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது என்பது கண்டிப்பாக இயலாத காரியமாக மாறும். வரும் மாதங்களில் பண வீக்கம் அதிகரிக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் பண வீக்கம் காரணமாக கண்டிப்பாக விலை ஏற்றம் இருக்கும். பலருக்கு இதனால் வேலை போகும். நிலைமை மிக மோசமாகும் என்று எச்சரிக்கை விடுத்தார் . அவர் எச்சரிக்கை விடுத்தது போலவே சர்வதேச அளவில் வேலையிழப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications