Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lunar Eclipse: அறிவில்லாக் கட்டுக் கதைகள்.. சந்திர கிரகணத்தால் ஒன்றுமே ஆகாது! வெறும் கண்ணாலேயே பார்க்கலாமாம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நாளை சந்திர கிரகணம் நடைபெற இருக்கும் நிலையில் 'பிளட் மூன்' எனப்படும் சிவப்பு நிறத்தில் நிலா தோன்றும் அரியவகை நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே வரக் கூடாது போன்ற பல்வேறு கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் உலாவும் நிலையில் பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம் எனவும், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் கூட பார்க்கலாம் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி கூறியுள்ளார்.

நாளை சந்திர கிரகணம் நடக்க இருக்கும் நிலையில் பிளட் மூன் எனப்படும் நிலா சிவப்பு நிறமாக மாறும் அரிய நிகழ்வு நடைபெற இருக்கிறது. இரவு 9:56 மணிக்கு கிரகணம் தொடங்கும் நிலையில் அதிகாலை 1:26 மணிக்கு கிரகணம் முடிகிறது. சுமார் 11:40 மணியளவில் கிரகணம் உச்சம் அடைந்திருக்கும் நிலையில் நிலா சிவப்பு நிறமாகத் தோற்றமளிக்கும்.

இதனை இரத்த நிலா என்றும் ரெட் மூன் என்றும் அழைப்பார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சந்திர கிரகணம் நீடிக்கும் நிலையில் இந்தியாவில் இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

Blood Moon Lunar Eclipse

சந்திர கிரகணம்

இந்த நிலையில் சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது. தேங்காயை வைத்திருக்க வேண்டும், கோவிலுக்குச் செல்லக்கூடாது, வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது போன்ற கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது, வெறும் கண்களால் காணக்கூடாது போன்று மூடநம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வான் இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி கூறியுள்ளார்.

அறிவியல் காரணம்

கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," பூமியை நிலவு சுற்றிவரும் போது சூரியனில் இருந்து வெளியேறும் கதிர்கள் பூமி மீது பட்டபிறகு அதன் நிழல் நிலவின் மீது படும் நிகழ்வை சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. நாளை இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணிவரை சந்திர கிரகணம் நடைபெற இருக்கிறது. அதன் உச்சகட்டமாக 12 மணிக்கு காணக் கூடும். குறிப்பாக இரவு 12 மணியளவில் தென்படும் நிலவு ஆரஞ்சு நிறத்திலும், பிறகு காப்பர் மற்றும் இறுதி கட்டமாக சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். அதனை ரெட் மூன், ப்ளட் மூன், ரத்த நிலா என்றும் அழைப்பார்கள்.

ரத்த நிலா

இதனை வானம் தெளிவாகத் தென்பட்டால் தொலைநோக்கி மூலமாகவும், வெறும் கண்களால் கூட பார்க்கலாம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. அடுத்த சந்திர கிரகணம் நிகழ்வானது 2028 டிசம்பர் மாதத்தில் தோன்றும். குறிப்பாக சந்திர கிரகணம் நடைபெறும் நேரத்தில் விமானத்தில் செல்பவர்கள் பூமியில் இருந்து 10 ஆயிரம் கிமீ தொலைவில் மேக மூட்டங்களுக்கிடையே செல்லும் போது இந்த அரிய நிகழ்வை சற்று அருகில் கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த நிகழ்வை கொடைக்கானல் அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆய்வகத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூட நம்பிக்கை

சந்திர கிரகணத்தை காண வரும் பொதுமக்கள் இலவசமாக தொலைநோக்கி மூலம் பார்க்க அனுமதிக்கப்படுவர். அதே போல பெங்களூரில் இருந்து தொலைநோக்கி மூலமும், வான் இயற்பியல் மையத்தின் யூடியூப் சேனல் மூலமாகவும் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் இந்த நிகழ்வு குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் இந்த நிகழ்வை கண்டு அச்சம் அடைந்து அதனை மூட நம்பிக்கையாக பார்த்தனர். ஆனால், தற்போது அதன் நிகழ்வு குறித்து புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது, வெறும் கண்களால் காணக்கூடாது போன்று மூட நம்பிக்கைகள் தற்போது இல்லை. எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+