Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல்லில் திகைத்து போன எஸ்டிபிஐ முபாரக்.. பக்கத்துல யாரு சீனிவாசனா? அந்த பாப்பா ஏன் சிரிக்குது

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அனலடிக்கும் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கேற்றவாறு சுவாரஸ்யங்களும் தொகுதிக்குள் நடந்து பரபரப்பை கிளப்பி விட்டுக்கொண்டிருக்கின்றன.

திண்டுக்கல் தொகுதியில் பிரச்சாரத்துக்கு மத்தியில் பண பட்டுவாடாவும் ஆங்காங்கே தாராளமாக நடந்து வருகிறதாம். அதிலும் அதிமுக சற்று மும்முரமாக வேலைபார்த்து வருகிறதாம்..

Can Dindigul Srinivasan overtake DMK Vote bank and what happened in Dindigul Constitution Lok sabha election campaign

வேட்பாளர்கள்: அதாவது, வேட்பாளர் வாக்குகள் சேகரிக்க வருவதற்கு முன்பாகவே, அங்கிருக்கும் ஸ்பீக்கர்களில் அதிமுகவின் கொள்கை பரப்பு பாடல்கள், எம்ஜிஆர் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன... அப்படித்தான் இன்றைய தினமும் எம்ஜிஆர் பாட்டு இசைக்கப்பட்டது. உடனே 2 எம்ஜிஆர் ரசிகர்கள், தங்களை மறந்து உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்கள். திடீரென டான்ஸ் ஆடவும் துவங்கிவிட்டனர்.

இதனால், அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல், அங்கிருந்த அனைத்து பொதுமக்களுமே இந்த டான்ஸை கண்டுகளித்தார்கள். உடனே, மக்களை மகிழ்வித்த அந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களது சட்டை பாக்கெட்டில் ரூபாய் நோட்டுக்களையும் "அன்பு" பரிசாக குத்தி மகிழ்ந்தார்கள்.

முபாரக்: திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார்கள்.

இதனால் இரு தரப்பிலுமே பிரச்சாரங்கள் சூடுபிடித்துவருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர், சாமியார் தோட்டம் அருகே உள்ள ராஜலட்சுமி நகரில், அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து, அதிமுக வேட்பாளர் முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் ஓட்டு கேட்டு அங்கே வந்தார்.

பிரச்சார வாகனம்: இரு கட்சியின் வேட்பாளர்களும், ஒரே தெருவில் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். 2 பிரச்சார வாகனங்களுமே பக்கத்தில் பக்கத்தில் வந்து நின்றன.. இதனால், இரு தரப்பிலும் என்ன நடக்க போகிறதோ? என்ற ஆர்வம் அங்கிருந்த பொதுமக்களுக்கு ஏற்பட்டது.

அப்போது, பிரச்சார வாகனத்திலிருந்த திண்டுக்கல் சீனிவாசன் டக்கென மைக் எடுத்து, "நமக்குள் சண்டை வேண்டாம், ஒதுங்கி போய் விடுவோம்.. எம்ஜிஆர், நம்பியார் போல சண்டை போட்டுக்க வேண்டாம்.. உங்க வீரத்தை இங்கே காட்டிடாதீங்க, ஒதுங்குங்க, ஒதுங்குங்க" என்று சத்தமாக சொன்னார்.

திமுக கூட்டணி: இதைக்கேட்டதுமே சிபிஎம் வேட்பாளர் உட்பட அனைவருமே சிரித்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல, திமுக கூட்டணி வேட்பாளரான அவருக்கு, திண்டுக்கல் சீனிவாசன் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு கிளம்பினார்.

இன்றைய தினமும், திண்டுக்கல் சீனிவாசன் முருகபவனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு பெண் தனது குழந்தையை கொடுத்து, பெயர் சூட்ட சொன்னார்.

ஆரவாரம்: குழந்தையை கையில் வாங்கிய திண்டுக்கல் சீனிவாசன், "அடடே, இரட்டை இலையை பார்த்ததுமே குழந்தை சிரிக்குதே.. அதனால், எம்ஜிஆரின் பெயரான "ராமச்சந்திரன்" என்று பெயர் வைக்கிறேன்" என்றதுமே, சுற்றிநின்ற தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனால், உண்மையிலேயே அந்த குழந்தை எதற்கு சிரித்தது? என்றே தெரியவில்லை...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+